Sep 8, 2009

எழுத்தறிவு தினம்.


நண்பர்களே இன்று சர்வதேச எழுத்தறிவு தினம்.
படிக்கத் தெரிந்தவர்கள் தெரியதாவர்களுக்கு சொல்லிக் கொடுங்கள். உங்களுக்கு தெரிந்தவைகளை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.
1965ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி தெஹ்ரான் நகரில் உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இம் மகாநாட்டில் உலகளாவிய ரீதியில் எழுத்தறிவின்மையால் ஏற்படக் கூடிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுகமாக பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் 8ஆம் தேதியை சர்வதேச எழுத்தறிவு நாளாக அனுசரிக்க வேண்டும். அனைவருக்கும் எழுத்தறிவு தின வாழ்த்துக்கள்.