Jan 22, 2011

வரவு எட்டணா....

நாங்கள் வாடிக்கையாளர்களோடு பேசும்போது ஒவ்வொரு முறையும் சந்திக்கிற சவால் அவர் களது தேவையை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். ஒவ்வொரு முறை பத்தி எழுதும் போதும் அதற்கான ஓப்பனிங் லைன் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கலைக் காட்டிலும் பெரிய சவால் இது. ஆனால் ஒரு Ice breaking நடந்து விட்டால் மிச்சமெல்லாம் இலகுவாக நடந்து விடும்.
சம்பாதிப்பது, அதைச் செலவழிக்கக் கூடியது வெறும் ரூ 1.44 இலட்சம் மட்டுமே. ஆனால் இறுதியில் (1,99,74,884 - 1,38,53,126 சேர்த்து வைப்பது, சேர்த்து வைத்ததைச் செலவு செய்வது என்ற வரிசை எல்லாம் சென்ற நூற்றாண்டின் சங்கதிகளாகி விட்டன. இன்றைய தலைமுறையினரில் பெரும்பாலானோருக்கான வரிசை பாருங்கள். a) செலவு செய்வது b) செலவு செய்வதை நிறுத்துவது c) அதற்குப் பதிலாக சேமிப்பது d) சேமிப்பதற்குப் பதிலாக முதலீடு செய்வது. இதில் வேடிக்கை என்னவென்றால் பெரும்பாலானோர் a ஐத் தாண்டி வருவதே கிடையாது.
Personal Finance பரிணாமத்தின் நான்கு படிநிலைகளாக இவற்றை நான் கருதுகிறேன். கூடவே, இந்த இடத்தில் ஒரு anecdote இன் துணையை நாடலாம் எனவும் கருதுகிறேன்.
அவன் 24 வயது இளைஞன் பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை. ஒரு குறிப்பிட்ட பாருக்கு மட்டும் வாராவாரம் 2000 முதல் 2500 ரூபாய் வரை செலவாகிறது. இது கடந்த இரண்டு வருடங்களாக நடக்கிறது.
ஏதேச்சையாக ஒரு நாள் அவனோடு உரையாடும் சந்தர்ப்பம் கிட்டியது. மாதம் எட்டாயிரம் ரூபாய் கேளிக்கைக்கு மட்டும் செலவழிக்கிறோமே என்ற விசனமே அவனுக்கு இருக்கவில்லை என்பதை அப்போது என்னால் உணர முடிந்தது. எட்டாயிரம் என்பது நான்கு இலக்கத்தில் உள்ள சிறு தொகை என்பதாக அவன் எண்ணிக்கொண்டிருந்தான்.
அவனைக் குடிக்க வேண்டாம் என்று வலியுறுத்த மனது வரவில்லை. ஆனால் எங்கே குடிக்க வேண்டும் அல்லது குடிக்கக் கூடாது என்பதைத் தீர்மானிப்பதில் உதவ விரும்பினேன். பாருக்குச் செல்வதை விட டாஸ்மாக் துணையுடன் வீட்டிலேயே தண்ணி அடித்தால் மாதம் 2000 ரூபாய் மட்டுமே ஆகும் என்று தெரிந்தது.
ஆக, மாதம் ஆறாயிரம் ரூபாய் மிச்சம் செய்ய முடியுமென்ற சூழலை ஒரு சின்ன லைஃப் ஸ்டைல் மாற்றம் மூலம் உருவாக்க முடிந்தது. மேலோட்டமாகப் பார்த்தால் இது சிறிய தொகையே.
ஆனால் இந்தத் தொகையை 18% வீதம் வளர்கிற வகையில் முதலீடு செய்தால் இருபது ஆண்டுகளில் ரூ. 1,38,53,126 (ரூ 1.39 கோடி) கிடைக்க வாய்ப்பு உண்டு.

Jan 11, 2011

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?”

“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே?
அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?” –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.
நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்.”

“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.

“இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.

இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.

“சரி”

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants….”.

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?
அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.

“இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?

“MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?” –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.