May 31, 2009

ஊட்டச் சத்துக்கள் (Nutrients)

உணவு பொருள்களில் கீழ்க் கண்ட ஊட்டச்சத்துகள் உள்ளன.

1. கார்போஹைட்ரேட்கள் (Carbohydrates)
2. புரதங்கள் (Proteins)
3. கொழுப்பு (Fat)
4. வைட்டமின்கள் (Vitamins)
5. தாதுப்பொருட்கள் (Minerals)
6. தண்ணீர் (Water)

1. கார்போஹைட்ரேட்கள்

கார்போஹைட்ரேட்கள் அடங்கியுள்ள உணவுப் பொருட்கள்.

1. அரிசி 2. கோதுமை 3. சோளம் 4. மக்காச் சோளம் 5. நவதானியங்கள் 6. உருளைக்கிழங்கு

7. மரவள்ளிக்கிழங்கு 8. கேரட் 9. சர்க்கரை வள்ளிக்கிழங்கு 10. இனிப்பு வகைகள்.

சர்க்கரை என்பதும் ஒருவகை கார்போ ஹைட்ரேட்தான். ஆனால், இதில் 100 சதவீதம் கார்போஹைட்ரேட் இருப்பதாலும், இது உடனடியாக இரத்தத்தில் கலப்பதாலும் ஆபத்தானது. எல்லா வகை இனிப்பு வகையிலும், குளிர்பானத்திலும், ஏன் நாம் உண்ணும் மருந்திலும் (மேல் பகுதியிலும்) கூட சர்க்கரை உள்ளதால், இது பல வழிகளில் உடலுக்குள் வந்து சேர்ந்து விடுகிறது.

சர்க்கரையை முற்றிலும் புறக்கணித்து, பிற கார்போஹைட்ரேட்களை நாட வேண்டும். தீட்டப்படாத அரிசி, கைக்குத்தல் அரிசி, முழு கோதுமை, மக்காச்சோளம், ராகி, கம்பு ஆகியவையும், கிழங்கு வகைகளும் ஆரோக்கிய மான கார்போஹைட்ரேட்கள் ஆகும். இவற்றில் 60-70 சதவீதம் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. நார்ச்சத்து, வைட்டமின், புரோட்டீன் மற்றும் மிகச்சிறிய அளவு கொழுப்பும் உள்ளது.

நமக்குத் தேவைப்படும் கலோரிகளில் 65 சதவீதம் கார்போஹைட்ரேட்களிலிருந்து வருதல் வேண்டும். 1 கிலோ கார்போஹைட்ரேட் 4 கலோரிகளைத் தருகின்றன.

2. புரதங்கள்

நமது உடலில் உள்ள செல்கள் புரதத்தால் ஆன கட்டமைப்பாகும். நம் உடலில் தினமும் முப்பதாயிரம் கோடி செல்கள் அழிந்து, அதற்குப் பதிலாகப் புதிய செல்கள் உருவாக்கப்படுகின்றன. இச்செயலுக்குப் புரதச்சத்து மிகவும் அவசியம். வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது புரதம். நமது உணவிலிருந்து பெறும் கலோரிகளில் 12 சதவீதம் புரதம் மூலம் பெறுவது நல்லது.

புரதச்சத்துள்ள உணவுப்பொருட்கள் : 1. இறைச்சி 2. மீன் 3. பருப்புவகைகள் 4. சோயாமொச்சை 5. பால் 6. முட்டை

இதில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றில் கொலஸ்ட்ரால் என்கிற கொழுப்பு உள்ளது. இவற்றை உண்பதால் இரத்தக்குழாய் எளிதில் அடைபட்டுவிடும். எனவே இவற்றைத் தவிர்த்து மீன் மற்றும் கோழி இறைச்சி ஆகியவைகளை உண்ணலாம்.

சோயா மொச்சையில் 40 சதவீதம் புரதம் இருப்பதால் சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்து பெற இதை உண்ணலாம். ஜப்பான் நாட்டின் மிக முக்கியமான உணவு இந்த சோயா மொச்சையாகும். பருப்பு மற்றும் பயறு வகைகளும் புரதச்சத்து அடங்கிய உணவுப் பொருட்களாகும்.

3. கொழுப்பு

மனிதனுடைய பரிணாம வளர்ச்சிகளில் தோன்றியதுதான் கொழுப்பு. ஆதி மனிதனுக்கு உணவுத் தட்டுப்பாடு வரும் காலங்களில் உணவினைத் திறம்பட சேமித்து வைக்க ஓர் ஏற்பாடு தேவைப்பட்டது. அதன் விளைவுதான் கொழுப்பு. குறைந்த எடையுள்ள கொழுப்பில் அதிக கலோரிகளைச் சேமித்து வைக்க முடியும்.

சிலரது உடலின் வளர்சிதை மாற்ற விகிதம் (Basic Metabolic Rate) அதிகமாக இருப்பதால் உண்ட கொழுப்பு முழுவதுமே செலவிடப்படுகிறது. இவர்கள் இயல்பான எடை யுடன் இருப்பார்கள்.

ஆனால், சிலரது உடலில் வளர்சிதை மாற்ற விகிதம் குறைவாக இருப்பதால் உண்ட கொழுப்பு செலவிடப்படாமல் உடலிலேயே சேமித்து வைக்கப்படுகிறது.

குறைந்த வளர்சிதை மாற்ற விகிதம் உள்ளவர்கள் அதிகம் கொழுப்பு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் போதுமான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும்.

நமது உடலுக்குத் தேவையான கலோரிகளில், 23 சதவீதம் கொழுப்பு உணவிலிருந்து வர வேண்டும். அதிக கொழுப்பு உண்டால் அது ஒரு சிலரின் உடல் வேதியியல் மாற்றத்திற்கு ஒத்து வருவதில்லை. எனவே அவை உடலில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஆண்களுக்கு முதலில் வயிற்றுப் பகுதியிலும், பெண்களுக்கு இடுப்புப் பகுதியிலும் சேமித்த பின்னர் கை, கால்களில் சேமிக்கப்படுகிறது. உடற்பயிற்சி செய்தும் உணவு கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தும் கொழுப்பைப் கரைக்கும் போது பின்னோக்கியே கரைக்கப்படுகிறது. அதாவது, கை, கால்களில் முதலிலும், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் இறுதியாகவும் கொழுப்பு கரைகிறது.

கொழுப்புச்சத்துள்ள உணவுகள் : 1. பால் 2. பாலாடைக்கட்டி 3. வெண்ணெய் 4. நெய் 5. எண்ணெய் 6. எண்ணெய் வித்துகள் 7. இறைச்சி 8. ஐஸ்கிரீம்.

இதில் சில கொழுப்புகள் Saturated Fatty Acid வகையைச் சார்ந்தவை. இவை எளிதில் உறையும் தன்மை கொண்டவை. எடுத்துக்காட்டாக, நெய், தேங்காய் எண்ணெய், டால்டா போன்றவை. இவை இதயத்தில் உள்ள இரத்தக்குழாயில் எளிதில் உறைந்து விடுவதால், இரத்தக் குழாய்கள் அடைபட்டு இதயநோய் வர ஏதுவாகிறது. எனவே இந்த Saturated Fatty Acid வகையிலான கொழுப்பு உணவைத் தவிர்க்க வேண்டும். மற்றவகை எண்ணெய்களைக் (கொழுப்பு) கூட மிகவும் குறைவாக பயன்படுத்த வேண்டும்.

கார்போஹைட்ரேட் அல்லது புரதம் அதிகம் உண்டால் அதனைக் கல்லீரல் (Liver) கொழுப்பாக மாற்றி உடலில் இருப்பு வைத்து விடும். அப்படிப் படியும் கொழுப்பு உடலில் தோலுக்கு அடியில் படிவமாகப் படிந்து விடுகிறது. எனவே, இவற்றையும் அளவுடன்தான் உண்ணவேண்டும்.

எல்லா ஊட்டச்சத்துகளும் நமக்கு அவசியமாகும். ஏதேனும் ஒன்று குறைபட்டால் நோய்கள் ஏற்பட்டுவிடும். கார்போஹைட்ரேட் குறைவென்றால் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி குன்றுதல் என்றநிலையும், புரதம் குறைவென்றால் குவாஷியர்கார் மற்றும் மாராஸ்மாஸ் என்னும் நோய்களும், கொழுப்புக் குறைவென்றால் பிரீனோடெர்மா (உலர்ந்த தோல்) என்றநோயும் ஏற்படுகிறது.

4. வைட்டமின்கள் (vitamins)

வைட்டமின்கள் இயற்கையில் காணப்படும் ஊட்டச்சத்துக்களாகும். இவை நமது உடல் வளர்ச்சிக்கும் உடல்நலத்திற்கும் அவசியமானது. சில வைட்டமின்கள் ஹார்மோன்களில் காணப்படுகின்றன. மற்றவை என்சைம்களின் செயல்பாட்டிற்குத் தேவைப்படுகின்றன. வைட்டமின்கள் தாதுப் பொருட்களுடன் சேர்ந்து அதிக முக்கியம் வாய்ந்த உடல் இயக்கப் பணிகளை மேற்கொள்கின்றன.

வைட்டமின்களை நீரில் கரையும் வைட்டமின்கள், கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் என்று பிரிக்கலாம். நீரில் கரையும் வைட்டமின்களாவது ‘ஆ’ வைட்டமின்களான ஆ1, ஆ2, ஆ3, ஆ5, ஆ6, ஆ12 மற்றும் வைட்டமின் ‘இ’ ஆகியவை ஆகும். வைட்டமின் ‘ஆ’ என்பது நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி, கோதுமை, கடலை வகைகள், மீன், இறைச்சி, பால், முட்டை, பச்சைக் காய்கறிகள் மற்றும் வாழைப்பழத்தில் காணப்படுகிறது. வைட்டமின் ‘இ’ என்பது பச்சைக் காய்கறிகள், இலைக் காய்கறிகள், கீரைகள், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை, தக்காளி மற்றும் பழ வகைகளில் உள்ளது.

வைட்டமின் ‘ஆ’ நமது நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும், உடலில் நோய்த் தடுக்கும் எதிர்ப்பாற்றலை தருவதற்கும், சக்தியை உடலில் தயாரிப்பதற்கும், உடல் வளர்ச்சிக்கும் அவசியமாகிறது. வைட்டமின் ‘இ’ மன உளைச்சல் அடைபவர்களுக்கும், புகை பிடிப்பவர்களுக்கும் அதிகம் தேவைப்படுகிறது. ஏனென்றால் இது செல்கள், தசைகள், இரத்தக்குழாய் மற்றும் பற்களைப் பழுது பார்க்க உதவி புரிகிறது.

தண்ணீரில் கரையும் இவ்விருவகை வைட்டமின்களை உடலில் சேமித்து வைக்க முடியாது. எனவே, அவை உணவின் மூலமாக தினமும் உடலுக்குள் செல்ல வேண்டும்.

அதேவேளையில், கொழுப்பில் கரையும் வைட்டமின்களான வைட்டமின் அ, ஈ, உ மற்றும் ஓ’ போன்றவற்றை உடலில் சேமித்து வைக்க முடியும். இவை கிழங்கு, காய்கறிகள், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், மீன் எண்ணெய், கடலை, பச்சைக் காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படுகின்றன. இந்த வைட்டமின்கள் வட உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. நோய்த் தாக்குதலில் இருந்து உடலுக்குப் பாதுகாப்புத் தருகின்றன. இவைகளும் உடலின் இயக்கத்திற்கு இன்றியமையாதவை ஆகும். வைட்டமின்கள், அவை காணப்படும் உணவுப்பொருள்கள், அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் ஆகியவற்றைப் பார்ப்போம்.

இவ்வனைத்து ஊட்டச்சத்துகளும் நமது உடலுக்கு எவ்வளவு தேவை என்பது நமக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். அந்தத் தேவையின் அளவுக்கு குறையாமல் உண்ணவேண்டும். மேற்சொன்ன உணவு வகைகளை அன்றாடம் உணவுடன் சேர்த்துக் கொண்டாலே வைட்டமின்கள் தேவை பூர்த்தி ஆகிவிடுகிறது.

5. தாதுப் பொருட்கள் (Minerals)

உணவில் காணப்படும் தாது உப்புகள் உடலில் பல இன்றியமையாத பணிகளைச் செய்கின்றன. தாதுப் பொருட்களாவன :

அ. கால்சியம் ஆ. துத்தநாகம் இ. இரும்பு ஈ. பொட்டாசியம் உ. மெக்னீசியம் ஊ. சோடியம்

வைட்டமின்களைப் போலவே தாதுப் பொருட்களையும் உடல் உறுப்புகள் தயாரித்துவிட முடியாது. எனவே, இவற்றையும் உண்ணும் உணவு மூலமாகத்தான் உடல் பெறவேண்டும். இவை அடங்கிய உணவுகளாவன

: அ. பால் ஆ. பாலாடைக்கட்டி இ. மாமிசம் ஈ. முட்டை உ. கடலை ஊ. பீன்ஸ் எ. விதைகள் ஏ. எலுமிச்சை ஐ. ஆப்பிள் ஒ. வாழைப்பழம் ஓ. உருளைக்கிழங்கு

ஆரோக்கியமான உணவு :-

அதாவது முழு தானிய அரிசி மற்றும் கோதுமை, பழ வகைகள் மற்றும் காய்கறிகள் - உண்ணும்போது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைத்து விடுகின்றன. வைட்டமின்கள் அல்லது மினரல்கள் தினமும் தேவைப்படுவதாலும் இதனை உடல் தானாக தயாரித்துக் கொள்ளாது என்பதாலும் இவை அடங்கிய உணவை தினமும் உண்ணுதல் அவசியமாகிறது. மேற்சொன்ன உணவு வகைகளை வழக்கமாக உண்ணாதவர்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு வைட்டமின் மாத்திரையைச் சாப்பிடுவது அவசியமாகிறது.


துபாய் - வெளிநாட்டு வேலை!


கடலூர் மாவட்டம் திட்டக்குடி பஸ் நிலையம் பக்கம் ஒருவர், கையில்பெட்டியுடன் சென்று கொண்டு இருந்தார்.


அந்த பெட்டியில், "வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்' என்று எழுதி, "இதுதொடர்பாக என்னிடம் போனில் விவரம் கேட்டுக்கொள்ளுங்கள்...' என்றும் எழுதியிருந்தது.


அதன்படி சேகரித்த விவரம் இது...


திட்டக்குடியைச் சேர்ந்தவர் சேரன்; திறமையான தையல் தொழிலாளி. வெளிநாட்டு வேலை மோகத்தில் சிக்கிய பலரில் இவரும் ஒருவர்.


"இப்படியே எத்தனைநாள் இருப்பாய், கையில் நறுக்குனு நாலுகாசுசம்பாதிக்க வேண்டாமா...உன்னமாதிரி டெய்லர் களுக்கு எல்லாம்அரபு நாட்டில கடுமையான கிராக்கி. மாதம் குறைந்தது 25 ஆயிரம்ரூபாய் சம்பாதிக்கலாம், ஜாலியா இருக்கலாம்...' என்று ஒரு உள்ளூர்அன்பர் ஒருவர் கூறியதுடன், "அரபு நாட்டிற்கு டெய்லர்கள் தேவை' என்று வந்திருந்த பத்திரிகை விளம்பரத்தையும் காட்டியுள்ளார்.


சேரனுக்கும் வெளிநாட்டு வேலை ஆசை வந்தது. "மத்தவங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்டணம். உனக்குகம்மிதாம்பா...' என்று சொல்லி 65 ஆயிரம் ரூபாய் என்று கேட்க, பல இடங்களில் கடன் வாங்கி, பணத்தை கொடுத்து, சிலநாள் கழித்து நிறைய கனவு களுடன் சவுதி அரேபியா போய் இறங்கியிருக்கிறார்.


விமானநிலையத்தில் ஒரு ஏஜண்ட், வந்திறங் கிய சேரன் மற்றும் அவருடன் சென்ற சிலரை அழைத்துக்கொண்டு, அங்குஇருந்து பாஹா என்ற நீண்ட தொலைவில் உள்ள கிராமத்திற்கு கூட்டிப் போய் இருக்கிறார்.


அதற்கு பிறகு ஒரே சோகம்தான்.


தமிழ் பேச ஆள் கிடையாது. டெய்லர் வேலை எல்லாம் கிடையாது. அங்கு உள்ள ஆடுகளைத்தான் மேய்க்க வேண்டும். மாதம் ஐந்து ஆயிரம் ரூபாய் சம்பளம். அதுவும் ஆறு மாதத்திற்கு பிறகுதான். தினமும் காலை 6 மணிக்கு ஆடுகளைஒட்டிக்கொண்டு போய் மேய்த்துவிட்டு, மாலை 6 மணிக்கு திரும்ப வேண்டும். மேய்க்கும் ஆடுகளுக்கு, அடி பட்டுவிட்டாலோ அல்லது வேலையில் அசட்டையாக இருந்தாலோ சவுக்கு போன்ற சாட்டையால் அடி தான். கஞ்சி, ரொட்டிதான் சாப்பாடு. ஆட்டுக்கிடையில் தான் தங்கல், தூங்கல் எல்லாம்.


உண்ணவும், உறங்கவும் மறந்து; உறவுகளை துறந்து இரண்டு வருடம் படாதபாடுபட்டு, ஒரு வழியாக அங்கு இருந்துதப்பிப் பிழைத்து இந்தியா திரும்பியிருக்கிறார்.

இப்போது தான்விட்டு சென்ற தையல் தொழிலை தொடர் வதுடன், வேலை இல்லாதவர் களுக்கு தையல் தொழிலைஇலவசமாக கற்றும் தருகிறார்.

வெளிநாட்டு வேலை என்ற வுடன் படிக்காத இளைஞர்கள் ஏமாந்து போய் பணத்தையும், வாழ்க்கையையும் தொலைத்துவிடக்கூடாதே என்ற ஆதங்கத் தில் விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காக, வெளியே எங்கே போனாலும் இந்த பெட்டியைஎடுத்துப் போகிறார். விசாரிப்ப வர்களிடம் எப்படியெல்லாம் உஷாராக இருக்கவேண்டும் என்பதை தன் அனுபவத்துடன்கூறுகிறார்.

தான் பட்ட அனுபவத்தை மட்டுமல்ல, அவமானத்தை கூட பகிர்ந்து கொண்டு, சமூகத் தில் விழிப்புணர்வு ஏற்படுத்தபெட்டியுடன் வலம்வரும் சேரன் நிச்சயமாக ஒரு வித் தியாசமான மனிதர்தான்.

May 30, 2009

நரிக்குறவர் விற்கும் விசிலில் பல சுருதிகள் கேட்பது எதனால்?

சிறுவயதில் என் கிராமத்து திருவிழாவில் பல விதமான விளையாட்டு பொருட்களில் நான் மட்டும் அல்ல மற்ற என் நண்பர்களும்கூட பெரும்பாலும் தேர்ந்தெடுப்பது விசில் தான்.
அதிலும் குறவர்கள் விற்கும் விசில் மிகச்சிறப்பாக இருக்கும்.இப்போதெல்லாம் அந்தவகை விசிலை குறவர்களே விற்ப்பதில்லை.
விசில் அடிப்பதில் பல நுட்பங்கள் இருக்கின்றன. ஒன்று விரலை மடக்கி வாயில் வைத்து வீல் என்று சத்தம் எழுப்புவது. மற்றொன்று பேரூந்து ஓட்டுனர் வைத்திருக்கும் கருவியை கொண்டு சத்தம் எழுப்புவது.

அல்லது குழந்தைகள் விளையாடும் விசிலை பயன்படுத்தலாம்
காவல் துறையினர் கூட வித்தியாசமான ஒரு வகை விசில் வைத்திருப்பார்கள்

அதே போல் நெகிழியில் (Plastic) தட்டையாக ஒரு கருவியை எங்கள் ஊர் பக்கம் திருவிழாக்களில் விற்பார்கள். பயங்கர சத்தம் வரும்.



ஆனால் இந்த கருவிகளில் எல்லாம் சத்தம் ஒரே சுருதியில் தான் இருக்கும். காரணம் இந்த கருவிகளில் எல்லாம் ஒரே அதிர்வெண்ணில் தான் காற்றின் அளைவு இருக்கும்

இதை தவிர நரிக்குறவர்கள் விற்கும் விசில் ஒன்று பிரபலம். அதை வைத்து ஊதினால் அனைவரும் திரும்பி பார்ப்பார்கள். காரணம் சத்தம் பல சுருதிகளில் கேட்கும். 2 இஞ்சு நீளம், 1 செ.மீ அகலம், 3 அல்லது 4 செமி உயரம் உள்ள இரு மரக்கட்டைகளுக்கு நடுவில் ஒரு மிதிவண்டி குழாய் (cycle tube) துண்டு கட்டப்பட்டிருக்கும்.


அதை வாயில் வைத்து ஊதினால் வெளிப்படும் சத்தத்தின் அதிர்வெண் அதிகமாகி, பிறகு மெதுவாக குறைந்து வித்தியாசமான சத்தம் கேட்கும். முதலில் சுருதி குறைவாக ஆரம்பித்து, அதன் பிறகு அதிக சுருதிக்கு சென்று பிறகு மீண்டும் பழைய படி கீழிறங்கும்.

எந்த ஒரு பொருளின் அதிர்வெணும் கீழ்க்கண்ட காரணிகளினால் தீர்மாணிக்கப்படுகிறது

  1. நீளம் - நீளம் அதிகமானல் குறைந்த அதிர்வெண். நீளம் குறைந்தால் அதிக அதிர்வெண். Frequency is inversely proportional to the length of the vibrating object. வீனையில் / கிடாரில்/ வயலினில் / பியானோவில் எல்லாம் இந்த சித்தாந்தம் தான்
  2. அகலம் - தடிமனான கம்பியை மீட்டினால் குறைந்த அதிர்வெண்ணும், மெல்லிய கம்பியை மீட்டினால் அதிக அதிர்வெண்ணும் கேட்பதை அறிந்திருப்பீர்கள். Frequency is inversely proportional to the Width of the vibrating object. கிடாரின் தடிமான கம்பியில் அதிர்வெண் குறைவாகவும், மெல்லிய கம்பியில் அதிர்வெண் அதிகமாகவும் கேட்கும் அதே பௌதீக சித்தாந்தம் தான் இது.
  3. விரைப்பு : கம்பி அல்லது அளையும் பொருளானது அதிக விரைப்பில் இருந்தால் அதிக அதிர்வெண் கேட்கும். Frequency is directly proportional to the Tension of the Vibrating Object.

இப்பொழுது இந்த விசிலை ஊதும் போது

  • நீளம் அதிகரிக்கிறது
  • அகலம் குறைகிறது. (ரப்பரின் நீளம் அதிகரித்தால் அகலம் குறையும் - ரப்பர் பேண்டை நீட்டி பாருங்கள்)
  • விரைப்பு அதிகரிக்கிறது


ஊதும் போது ரப்பர் துண்டு நீளமாகி (அகலம் குறைந்து) அதனால் அதன் அதிர்வெண் அதிகரிக்கிறது.

அதன் பிறகு இழுத்த மூச்சு காற்றின் வேகம் குறையும் போது அதிர்வெண் குறைகிறது. கிட்டத்தட்ட கிளாரினெட்டில் சரிகமபமகரிச என்று வாசிப்பது போலிருக்கும்


இந்த பௌதிகம் எப்படி நரிக்குறவர்களுக்கு தெரிந்தது என்று நான் பல முறை வியந்திருக்கிறேன். (அவர்களின் ஒவ்வொரு பொருளுக்கு பின்னாலும் ஒரு பௌதீக விதி இருக்கும்)

May 29, 2009

நோக்கியா மொபைல் - சில டிப்ஸ்

#7780# – பல செட்டிங்ஸ் அமைப்புகளை மாற்றி நீங்கள் விருப்பப்படும் வகையில் போன் செட்டிங்ஸை மாற்றிவிட்டீர்கள். ஒரு கட்டத்தில் பழைய பேக்டரி செட்டிங்ஸே இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்கள். அப்போது மொபைல் போனின் பேக்டரி அமைப்புகளை மீண்டும் கொண்டு வர இந்த கீகளை அழுத்த வேண்டும்.


#3283# – உங்கள் மொபைல் செட் எப்போது தயாரிக்கப்பட்டது என்று அந்த நாளை அறிய.


#746025625# – சிம் மூலம் ஓடிக் கொண்டிருக்கின்ற கடிகாரத்தினை நிறுத்த.


#67705646# – மொபைல் ஆப்பரேட்டரின் லோகோ திரையில் தோன்றுகிறதா? அதனை நீக்க விரும்புகிறீர்களா? இந்த கோட் எண்களை அமைத்து அழுத்தவும்.


#73# – விளையாடிக் கொண்டிருக்கும் கேம்ஸில் பெற்ற ஸ்கோர்களை புதியதாக செட் செய்திடவும் போன் டைமரை மாற்றவும் இது பயன்படும்.


#0000# – அல்லது * #9999# – உங்கள் மொபைல் போனில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பினை அறிய.




*#06# – மொபைலின் அடையாள தனி எண்ணை அறிந்து கொள்ள.


#92702689# – மொபைல் போனின் வாரண்டி குறித்த தகவல்களை (சீரியல் எண், வாங்கிய நாள், ரிப்பேர் செய்த நாள், இதுவரை இயங்கிய லைப் டைம் ) அறிய இந்த கீகளை அழுத்தவும்.


#7760# – தயாரிப்பு வரிசை எண்ணை அறிய


#bta0# புளுடூத் மேக் அட்ரஸ் தெரிந்து கொள்ள.


#147# – நீங்கள் நோக்கியா மொபைல் போனில் வோடபோன் சர்வீஸ் பயன்படுத்துபவராக இருந்தால் இறுதியாகப் பயன்படுத்திய போன் எண்ணை அறிந்து கொள்ள.


#2640# – மொபைல் போனின் செக்யூரிட்டி கோட் குறித்து அறிய.


#7328748263373738# – போனில் பதிந்து தரப்பட்டிருக்கும் டிபால்ட் செக்யூரிட்டி கோட் குறித்து அறிந்து கொள்ள.


#43# – கால் வெயிட்டிங் நிலை குறித்து அறிய.


#2820# – புளுடூத் தகவல் தெரிந்து கொள்ள.


#7370# – மொபைல் போன் மெமரியை பார்மட் செய்திட .


#delset# # – ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இமெயில் செட்டிங்ஸ் அமைப்பினை அழித்திட.


#pw+1234567890+1# – மொபைல் செட்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்து தெரிந்து கொள்ள.


#pw+1234567890+4# – உங்கள் சிம் கார்டின் லாக் ஸ்டேட்டஸ் குறித்துத் தெரிந்து கொள்ள.

May 26, 2009

[ஈழம்] இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

Disclaimer: இதய பலவீனம் உள்ளவர்கள், பெண்கள், குழந்தைகளுக்கு இந்த பதிவு ஏற்புடையதல்ல.

ஒரு புகைப்படம் 1000 சொற்களுக்கு சமம் என்றொரு பழமொழி உண்டு. கீழ்க்காணும் புகைப்படங்கள் எனக்கு மின்னஞ்சலில் வந்தவை. புகைப்படங்கள் மகா கோரமானவை.இதன் shock value விற்காக இந்த புகைப்படங்கள் இங்கே பிரசூரிக்கப்படவில்லை. இதன் பின்னிருக்கும் அடக்குமுறையும், அரசாங்க வன்முறையும் தான் இதை வெளியிட தூண்டியது.இதனை வெளியிடுதலில் வருத்தத்தினை விட கோவமும், கையாலாகதத்தனமும் தான் மிஞ்சுகிறது.

















உருவ வழிபாடு - ஒரு ஸென் கதை

ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா'ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான்.

ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், "உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்" என்று கேட்டான்.

"நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை" என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், "நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்" என்றார்.

கொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், "உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே?" என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.

அவனுடையக் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார் ஹுவாங்னியா.

வாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், "ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்?" என்று கோபத்துடன் கேட்டான்.

"ஏன்" என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, "உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது" என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.

ஸகலத் தொடர்நிலைப் பாட்டையும் (USB) நெருப்புக்கம்பியும் (Firewire)

கணினித் தொழிலில் புதிது புதிதாக சொற்கள் தோன்றுகின்றன. புதிதாக நெறிகளும் வளர்கின்றன. கணினி வரலாற்றில் பரிணமித்து வரும் பகுதிதான் தொடர்நிலைத் துறை (Serial Port). முதலில் வந்த கணினிகளில் RS-232 என்ற தொடர்நிலைத் துறை மட்டும் தான் இருந்தது. பிறகு PS/2 என்ற நெறி உருவாகியது. இவ்விரு துறைகளும் மந்தமான தரவு பரிமாற்றுத்திறன் கொண்டிருந்தன. 1.5Mbps (நொடிக்கு 1.5 மெகாபிட்) வேகத்தில் எலி (mouse) அல்லது கோளச்சுட்டி (trackball) உபயோகங்களில் மட்டுமே இது சாத்தியமாக இருந்தது. இரண்டு நெறிமுறைகள் - சகல தொடர்நிலைப் பாட்டை (USB) மற்றும் நெருப்புக்கம்பி (Firewire) உருவாக்கபட்டன. இவ்விரு நெறிமுறைகளுக்கிடையே ஒற்றுமைகள் உண்டு. USB மற்றும் நெருப்புக்கம்பியின் இணைப்பிகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தாலும், நிஜத்தில் ஏற்பற்றது(incompatible) ஆகும்.

Firewire ஆப்பிள் நிருமத்தால் 1980களில் படைக்கப்பட்டது. இது நிலைவட்டுகளிடமிருந்து (hard disk) தரவுப்பரிமாற்றம் மேற்கொள்வதற்காக ஆரம்பத்தில் உபயோகிக்கபட்டது. பிறகு புறக்கருவிகளுக்கு (peripherals) நீட்டிக்கப்பட்டது. இதன் வெற்றியைக் கண்ட ஆப்பீள் நிறுமம் இந்த நெறிமுறையை IEEE அமைப்பு மூலம் டிஸம்பர் 1995யில் தரப்படுத்தியது. ஆனால் Firewireயின் தரமாக்கத்திற்கு முன்பே ஸோனி நிறுமம் மூலம் நிகழ்பதிவி கருவி (camcorder) தொழிலகத்தில் கடைப்பிடித்து சந்தையில் வெளிவந்தது. ஸோனி நிறுமம் நெறுப்புக்கம்பிக்கு I.Link என்ற பெயரிட்டு அதன் நிகழ்பதிவிகளைச் சந்தையிட்டது. Firewireயின் செயல்முறைப்படுத்தல்களில் வேறுபாடுகள் உண்டு. Firewire இன்று ஸோனி மற்றும் ஆப்பிள் கணினிகளில் ப்ரபலமாக காணப்படுகிறது. இது தவிர நிகழ்பதிவிகள், புற நிலைவட்டுகள் (external hard drives), ஒளிவட்டு இயக்கிகள், வருடிகள் (scanners), இணைய படக்கருவிகள் (webcams) போன்ற சாதங்களில் பயன்படுகிறது. Firewireயின் தரவுபரிமாற்றம் தொடக்கத்திலேயே 400Mbps வரை ஆதரித்தது.

ஸகல தொடர்நிலை பாட்டை பல நிறுமங்கள்- காம்ப்பேக், இலக்கக் கருவி (Digital Equipment), மைக்ரொஸாஃப்ட், ஆகியவற்றின் கூட்டுழைப்பால் கருத்தமையப்பட்டு 1998இல் தரமாக்கப்பட்டது. மைக்ரொஸாஃப்ட் நிறுமம் விண்டோஸ் 98 இயங்குதளத்தோடு USBவிற்கான இயக்க மென்பொருள்களை (driver) விடுவித்தது. USB1.1 12Mbps மற்றும் 400Mbps வேகங்களில் தரவுகளை பரிமாற்றும். USB2.0 நெறிமுறை 2002இல் தான் வெளியிடப்பட்டது. USB2.0 வெளியீட்டில் தரவு பரிமாற்றம் 480Mbps வரை நீட்டிக்கப்பட்டது.

Firewire என்பது ஒரு சம உரிமை பாட்டை முறைமை (peer-to-peer bus system). Firewire சாதனங்கள் அனைத்தும் முழு செயல்கூற்றுக்கள் (functionalities)- ஆண்டான் (master) மற்றும் அடிமை (slave) ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும். ஆகையால் Firewire சாதனங்கள் USB சாதனங்களைவிட விலை அதிகமானவை. இக்கட்டமைப்பின் பலன் என்னவென்றால் ஒரு கணினி போன்ற விருந்தோம்பி சாதனம் (host device) ஒரு Firewire அமைப்பில் தேவையில்லை. உதாரணத்திற்கு - ஒரு நிகழ்பதிவி ஒரு இலக்க ஒளித்தோற்ற வட்டு படிப்பியிடம் (DVD player) கணினியின்றி நேரடியாக தொடர்புகொள்ள முடியும்.

USB என்பது ஒரு விருந்தோம்பிசார் முறைமை (host-based system). ஒரு USB அமைப்பில் ஒரு கணினி விருந்தோம்பி சாதனமாக தேவைப்படுகிறது. இவ்விருந்தோம்பிக்கு இணைந்திருக்கும் அனைத்துச் சாதனங்களும் அடிமைகளாக திகழ்கின்றன. கணினி/விருந்தோம்பி தவிற்று USB பொருள்களின் தருக்கங்களில் அடிமை செயல்கூறு மற்றும்தான் அடங்கியுள்ளன. ஆகையால் USB சாதனங்கள் Firewire சாதனங்களைவிட மலிவு விலைகளில் கிடைக்கின்றன.

ஒரு USB அமைப்பில் மூன்று வகையான சாதங்கள் இணைக்கப்படலாம். முதலாவது விருந்தோம்பி (host). இப்விருந்தோம்பி தான் USB முறைமைக்கு கட்டுப்படுத்தி. ஒரு USB அமைப்பை படத்தில் காணலாம்.

USB சாதனங்களில் குறைதிறன் மற்றும் அதிதிறன் சாதனங்கள் என வகைக்கப்படுகின்றன. இந்த வகைபாடு உபயோகமாகும் மின்னோட்டத்திற்குக் தகுந்ததாகும். குறைதிறன் சாதனங்கள் 100mAக்குக் குறைவான மின்னோட்டத்தில் இயங்குகின்றன. அதிதிறன சாதனங்கள் 100mAயிலிருந்து 500mA வரை இயங்குகின்றன. ஒரு பாட்டைதிறன் குவியம் (bus powered hub) குறைதிறன் சாதனங்களுக்கு மட்டும் மின்திறனை வினியோகப்படுத்தும். ஒரு பாட்டை திறன் குவியத்தில் மொத்த மின்னோட்ட உபயோகம் 500mAக்குள் இருத்தல் வேண்டும். பாட்டை திறன் குவியம் ஒரு அதிதிறன் சாதனம் ஆகும். ஆகையால் இது மேற்புறம் விருந்தோம்பி அல்லது சுயதிறன் குவியத்திற்கு இணைக்கப்படுகிறது. ஒரு சாதனம் 500mAத்திற்கு மேல் தேவைப்பட்டால் அது சுயதிறனாக இருக்கவேண்டும். ஒரு சுயதிறன் குவியம் பாட்டை திறன் குவியத்துடன் இணைக்கப்படலாம். ஒரு பாட்டை திறன் குவியம் இன்னொரு பாட்டை திறன் குவியத்துடன் அல்லது நான்குக்கு மேற்பட்ட கீழ்ப்புற சாதனங்களுடன் இணைக்கப்படக்கூடாது.

USB தரவு பரிமாற்றங்கள் நான்கு வகையானவை: குறுக்கீடு (interrupt), கட்டுப்பாடு (control), மொத்தம் (bulk) மற்றும் நேரமொன்றியம் (isochronous).

USB இயக்கமென்பொருள் சாதனங்களின் இருப்பு மற்றும் இணைதல், பரித்தல் நிகழ்வுகளை உணர்கிறது. விண்டோஸ் 98, NT5.0, XP ஆகிய இயங்குதளங்கள் இந்த USB இயக்கமென்பொருளுடன் வினியோகிக்கப்படுகிறது. இந்த மென்பொருள் செருகு இயக்க நெறிமுறையை (plug & play) கடைப்பிடிக்கிறது.

USB என்படு "பேசப்பட்டால் பேசு" நெறிமுறையாகும். புறக்கருவிகள் விருந்தோம்பியுடன் தன்னிச்சையாக தொடர்புகொள்ள முடியாது; விரும்புதோம்பி இத்தொடர்பைத் தயவிட்டால் மட்டும் தான் இவர்கள் தொடர்புகொள்ளும். ஒரு Firewire கணு தன்னிச்சையாக எந்நேரமும் மற்றக் கணுவுடன் தொடர்புகொள்ளலாம்.

USB 5V மின்வழங்கலில் இயங்குகிறது. Firewire 30V வரை வழங்கக்கூடியது.

அம்சம் Firewire USB
1.1 2.1 400 800
தரவுப் பரிமாற்ற வீதம் 12 Mbps 480 Mbps 400 Mbps 800 Mbps
சாதனங்களின் எண்ணிக்கை 127 127 63 63
செருகியக்கம் ஆம் ஆம் ஆம் ஆம்
வென்செருகல் ஆம் ஆம் ஆம் ஆம்
பாட்டைத்திறன் ஆம் ஆம் ஆம் ஆம்
பாட்டை முடிப்பின் தேவை இல்லை இல்லை இல்லை இல்லை
பாட்டை வகை தொடர்நிலை தொடர்நிலை தொடர்நிலை தொடர்நிலை
கம்பிவட வகை முறுக்கிரட்டை (4 மின்கம்பிகள், 2 திறன், 1 முறுக்கிரட்டைத் தொகுப்பு) முறுக்கிரட்டை (4 மின்கம்பிகள், 2 திறன், 1 முறுக்கிரட்டைத் தொகுப்பு) முறுக்கிரட்டை (6 மின்கம்பிகள், 2 திறன், 2 முறுக்கிரட்டைத் தொகுப்புகள்) முறுக்கிரட்டை (8 மின்கம்பிகள், 2 திறன், 2 முறுக்கிரட்டைத் தொகுப்புகள், 2 நிலம்)
பிணையத்தகுமை விருந்தோம்பி சார்ந்த விருந்தோம்பி சார்ந்த ஒப்பி-ஒப்பி பரிமாற்றம் ஒப்பி-ஒப்பி பரிமாற்றம்
பிணைய இடவியல் குவிப்பு குவிப்பு தொடர்ச்சங்கிலி தொடர்ச்சங்கிலி


May 25, 2009

பார்ட்டி.. பார்ட்டி.. பார்ட்டி.



காலையில் தேநீர்க் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே, மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் நாடு இப்போது உள்ளது மிகவும் வேதனையான ஒன்றுதான். ஒவ்வொரு ஆண்டும் மது விற்பனை அதிகரித்துக்கொண்டே போவதும் யாவருமறிந்ததே.

அத்தி பூத்தாற்போல, எப்போதாவது நண்பர்களோடு சிறிதளவு மது அருந்தி வாழ்க்கையை அனுபவிப்பவர்களும் உண்டு; இப்போது குடித்தே ஆகவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு, தினமும் மட்டையாகும் அளவிற்கு குடித்தே அழிபவர்களும் உண்டு. இவர்களால்தான் குடும்பமே நிம்மதியிழந்து, பொருளாதாரத்தில் சீர்குலைந்து நடுத்தெருவிற்கே வந்துவிடும் நிலையும் ஏற்படுவதுண்டு.

ஏதோ ஒரு சில காரணங்களுக்காக குடிக்க ஆரம்பித்து, நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, அதிலிருந்து மீளவேண்டும் என்ற எண்ணம் இருந்தும் மீளமுடியாமல் இருப்பவர்கள், குடிப்பழக்கத்தைக் கைவிடுவதெப்படி?
இவர்களின் குடிப்பழக்கத்தைப் போக்குவதற்காக தங்களுடைய அனுபவங்களையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்கள் குடிப்பழக்கத்தை அறவே அகற்றிய "முன்னாள் குடிகாரர்கள்".

ஒருகாலத்தில் முழுநேரக் குடிகாரர்களாக இருந்து, இப்போது முழுமையாக குடிப்பழக்கத்திலிருந்து வெளிவந்தவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்புதான் "ALCOHOLICS ANONYMOUS". இவர்களின் "Public Information Meeting" ஆனது வருகிற ஜூன் மாதம் 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
அமைப்பு தொடங்கிய மூன்றாவது ஆண்டில், மூன்றாவது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக இதன் அமைப்பாளர்கள் கூறுகிறார்கள்.

சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள " முனைவர் எம்.ரமணிசுகுமார் " அவர்களிடம் பேசுகையில், குடிப்பழக்கமுள்ளவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டாலே, நாமும் இப்பழக்கத்தைக் கைவிடவேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார்.

இச்செய்தியை மக்களிடம் பரப்புவோம். அவர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட உதவுவோம்.

மதுவினால் அழிவோரைத் தடுப்போம்! போதையிலிருந்து நாட்டை மீட்போம்!!

May 23, 2009

ரெட் ஐ (Red Eye) என்றால் என்ன? நீக்குவது எப்படி?

இதில் மென்பொருள் தரவிறக்கம் இல்லை.மாறாக புகை படம் எடுக்கும் பொழுது red eye வராமல் தடுக்கும் வழிமுறைகள் இதில் தரப்பட்டுள்ளன.

தங்கள் அன்பான மனைவி, கணவன் ஏன் குழந்தைகள் பேரப்பிள்ளைகளை டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுக்கிறீர்கள். போட்டோ எடுத்த பின்னர் அதனை மானிட்டரில் பார்க்கையில் அவர்கள் சிகப்பு கண் பேய்களாகத் தோற்றமளிக்கலாம். (சும்மா கிண்டலுக்காக!) படத்தில் உள்ளவர்களின் கண்கள் சிகப்பான சிறிய உருண்டையாக இருப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.


இதனைப் பொதுவாக ரெட் ஐ என்று கூறுகின்றனர். பல கேமரா நிறுவனங்கள் தங்கள் கேமராக்களில் ரெட் ஐ நீக்கம் இருப்பதாக விளம்பரப்படுத்துவதும் இதனையே குறிக்கிறது.

முதலில் இது என்ன என்று பார்ப்போம். ரெட் ஐ என்பது அடிப்படையில் கண்களின் பின்புறத் தோற்றத்தின் ஒளி பிரதிபலிப்பு. கண்களில் உள்ள ரெட்டினாவின் ஸ்நாப் ஷாட் என்று கூடச் சொல்லலாம். எனவே எவ்வளவுக்கு எவ்வளவு கண்களை விரித்த நிலையில் வைத்து போட்டோ எடுக்கிறோமோ அந்த அளவிற்கு ரெட் ஐ யும் தோன்றும். போட்டோ எடுக்கையில் அறை விளக்குகளை எரிய விடுகையில் கண்கள் தாமாகவே சுருங்குகின்றன.


ரெட் ஐ காட்சி தோன்றுவதில்லை. பல டிஜிட்டல் கேமராக்கள் ரெட் ஐ நீக்கும் வசதியைக் கொண்டுள்ளன. இது வேறு ஒன்றும் இல்லை. உங்கள் கண்களைச் சிறிதாகத் திறக்க வைக்கும் ஏற்பாடுதான். இதிலும் போட்டோ எடுக்கப்படுபவர் கேமராவினை நோக்கியவாறு இருக்க வேண்டும். இல்லை என்றால் கேமராவின் ரெட் ஐ நீக்கும் வசதி எடுபடாது.


சிலவேளைகளில் மிதமான வெளிச்சம் ரெட் ஐ ஏற்படுவதனைத் தடுக்கும். புதிய பயன்படுத்தப்படாத டிஷ்யூ பேப்பர் ஒன்றை பிளாஷ் மேலாகப் பயன்படுத்தலாம். ஆனால் இப்படி செய்திடுகையில் உங்கள் பிளாஷ் வெளிச்சம் செல்லும் தூரம் குறையும். எனவே போட்டோ எடுக்கப்படுபவர் மிகவும் நெருக்கமாக இருக்கும்போது மட்டும் இந்த முறையைப் பயன்படுத்தவும். ஸூம் அமைக்கையில் அதன் இறுதி வரை பயன்படுத்தினால் ரெட் ஐ வர வாய்ப்புகள் அதிகம்.



உங்கள் கேமராவுடன் தனியாகவும் துணைச் சாதனமாகவும் பிளாஷ் லைட் பயன்படுத்தினால் கீழ்க்காணும் தகவல்கள் உபயோகமாக இருக்கும். உங்கள் பிளாஷ் லைட்டில் "பவுன்ஸ்' வசதி இருந்தால் லைட்டை அறையின் கூரை நோக்கி திருப்பவும். ஒளி மேலே சென்று அப்படியே போட்டோ எடுப்பவர் மீது பவுன்ஸ் ஆகும். இதில் இன்னொரு பிரச்சினை ஏற்படலாம்.


இது போல ஒளி பவுன்ஸ் ஆகும் போது போட்டோ எடுக்கப்படுபவர் தாடையில் சிறிய தாடி ஒன்று உள்ளது போல நிழல் விழலாம். எனவே அடுத்த டிப்ஸ் பயனுள்ளதா என்று பார்க்கவும். தொழில் முறை போட்டோ கிராபர்கள் அவர்களுடைய பிளாஷ் லைட்டை ஒரு பிராக்கெட்டில் வைத்து இயக்குவதனைப் பார்க்கலாம். இந்த முறையும் ரெட் ஐ விளைவினை ஏற்படுத்தாமல் தடுக்கும்.


பொதுவாக இந்த ரெட் ஐ கேமரா ஒரு சில கோணத்தில் வைக்கும்போது மட்டுமே ஏற்படுவதனைப் பார்க்கலாம். எனவே பிளாஷ் மாறி வெளிச்சத்தினைத் தரும் வகையில் கேமராவின் கோணத்தை மாற்றினால் இந்த ரெட் ஐ ஏற்படாத வண்ணம் போட்டோ எடுக்கலாம். சித்திரமும் கைப் பழக்கம் என்ற பழமொழி நினைவில் உள்ளதா!

மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்...


1. மொபைல் போன்களுக்குள் திரவங்கள் செல்வது வெகு எளிது. இதனைத் தடுப்பது மிக மிகக் கடினம். தண்ணீர், எண்ணெய், பால், டீ, கூல் ட்ரிங்க், ஷேவிங் கிரீம் என எது வேண்டுமானாலும் மொபைல் உள்ளே செல்லலாம். எனவே இவற்றிலிருந்து கூடுதல் கவனத்துடன் தள்ளி இருக்க வேண்டும். ஈரப்பதத்தினால் போன் கெட்டுப் போனால் அதனைச் சரி செய்வது கடினம். அப்படிக் கெட்டுப் போனால் போனை விற்பனை செய்தவர் போன் வாரண்டி காலத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளமாட்டார்.

2. திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.

3. சூரிய ஒளியில் மொபைல் போன்களை அதிகம் வெளிக் காட்டக் கூடாது. இதன் மூலம் போனின் பளபளப்பு மற்றும் வண்ணம் மாறும் வாய்ப்புண்டு. சூரிய ஒளியினைத் தடுப்பதிலும் சிறிய பைகள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உதவுகின்றன.

4. ஒவ்வொரு மொபைல் வாங்கி இயக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணைத் (International Mobile Equipment Identity) தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மொபைல் போனுக்கான வாரண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்து போனால் இந்த எண்ணைக் கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலாம்.

5. எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைத்துமே தூசியினால் கெட்டுப் போகும் வாய்ப்புள்ளவை. எனவே நல்ல கவர் போட்டு மூடியவாறே பயன்படுத்துவது நல்லது.

6. உங்கள் மொபைல் போனில் ஏதேனும் ஒரு ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பைப் பதிந்து வைப்பது நல்லது.

7. விரலால் கீ பேடினை இயக்கவும். விரல் நகங்கள் மற்றும் கூர்மையான சாதனங்கள் கீ பேடிற்குத் தீங்கு விளைவிக்கும்.

8. வெகு காலத்திற்கு மொபைலைப் பயன்படுத்தப்போவது இல்லை என்றால் பேட்டரியினைக் கழற்றி வைக்கவும்.

9. மொபைல் போனுடன் எந்த துணைச் சாதனத்தை அல்லது பேட்டரியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும் மொபைலைத் தயாரித்த நிறுவனம் அங்கீகரித்த சாதனங்களை மட்டுமே பயன்படுத்தவும்.

10. சிறிய மொபைல் போனில் எக்கச்சக்க வசதிகளைத் தருவதில் இன்றைய மொபைல் நிறுவனங்கள் முயற்சித்து வடிவமைத்து வருகின்றன. இதற்கேற்ற வகையில் மொபைலில் பயன்படுத்தப்படும் சர்க்யூட் போர்டுகள் பல லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய தள வரிசைகளாக நிற்க வைக்கப்பட்டுள்ளதால் சிறிய அதிர்ச்சி கூட இவற்றின் செயல்பாட்டினை முடக்கும். இவற்றைத் தடுப்பதிலும் சிறிய போம் பைகள் அல்லது கவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இத்தகைய வழிகளில் சேதம் ஏற்பட்டாலும் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

11. அடிக்கடி சார்ஜ் செய்யப்படும் மொபைல் பேட்டரிகள் விரைவில் வீணாகும் வாய்ப்பு உண்டு. எனவே பேட்டரி சார்ஜர்களை எடுத்துச் சென்று தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும்.

12. நோக்கியா போன்கள் ரிசர்வ் பேட்டரியுடனேயே வருகின்றன. எனவே பேட்டரி சார்ஜ் தீருகையில் *3370# என்ற எண்ணைப் பயன்படுத்தவும். இந்த எண்ணை அழுத்தினால் ரிசர்வ் பேட்டரி செயல்படுத்தப்பட்டு மொபைலின் பேட்டரி திறன் 50% கூடுவதைக் காணலாம்.

13. மொபைல் போனுடன் வரும் மேனுவல் என்னும் பயன்படுத்துவதற்கான குறிப்பு புத்தகத்தினை படித்து தெரிந்து கொண்டு மொபைலைப் பயன்படுத்தவும்.

14. உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. இல்லையேல் பேட்டரி பவர் வீணாகும்.

15. பேட்டரியை மொபைல் போனிலிருந்து வெளியே எடுக்கப் போகிறீர்களா? முதலில் மொபைலை ஆப் செய்துவிட்டு பின் எடுங்கள்.

16. தேவைப்படும்போது மட்டும் புளுடூத் வசதியை இயக்கவும். மற்ற நேரங்களில் அதனை ஆப் செய்து வைப்பது பேட்டரி மற்றும் உங்கள் மொபைல் போனுக்கு நல்லது.

மனிதமனம் ஓர் ஆற்றல் களஞ்சியம்


human mindபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புது மனித யுகம் தோன்றியது. அப்போது மொழி (பேச்சு) என்றால் என்னவென்றே மனிதனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் அழுகையும், சிரிப்பும், பசியும்தான். பின்னர் வாயசைவின் மூலம் தமது செயல்களுக்கு மொழிவடிவம் கொண்டு வந்தனர், பின்னர் அவற்றைத் தங்கள் அறிவுக்குத் தகுந்தவாறு மாற்றியமைத்தனர். இதைத்தான் நாம் சிந்தித்தல் என்கிறோம். இந்தச் சிந்தனைக்கும், மனதிற்கும் தொடர்பு உண்டா என்றால், புதிய சிந்தனைகளுக்கு நம்முடைய மனமே பிறப்பிடமாகத் திகழ்கின்றது. நம் மனம் ஒருநிலைப்பட்டு இருக்கும்போது புதுப் புதுச் சிந்தனைகள் துளிர் விடுகின்றன. நம்முடைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கெல்லாம் இவ்வகையான ஆற்றல் கொண்ட மனமே காரணமாயிருக்கிறது.

முதலில் மனம் என்றால் என்ன? இதை இரண்டே வரிகளில் விளக்க முயல்வது பெரிய மலையைக் கயிறால் இழுக்க முயல்வதற்குச் சமம்.  அதனை உணர்வுபூர்வமாக அறிந்து கொள்வதற்கே இந்த சிறு பயணம்.

நம் எல்லோருக்கும் ஓர் அனுபவம் ஏற்பட்டிருக்கும்: ஒரு கணக்குக்கு விடை தேடிக்கொண்டிருந்திருப்போம், கிடைத்திருக்காது. அதை விட்டுவிட்டால் கிடைக்காமலே போயிருக்கும். மாறாக அதைத் திரும்பத் திரும்ப எண்ணும்போது திடீரென எப்போதாவது விடை தோன்றும். இவையெல்லாம் நம் உள்மனதிலிருந்து தோன்றியவை, வெளியில் இருந்து வந்தவை அல்ல என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். விவேகானந்தரும் இந்த மன ஆற்றல்களை ஆழ்ந்து ஆராய்ந்திருக்கிறார். ‘எந்த ஒரு செயலும் வெளியில் இருந்த வருவது அன்று; அது உங்களுக்குள் இருந்து வெளிப்படுகிறது’ என்கிறார். பூரணம் அடைந்த ஞானிகள் கூட எதையும் படித்து, கேட்டு அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குள் உள்ள ஞானத்தை உள்ளூர ஆராய்ந்து வெளிப்படுத்துகிறார்கள்.

நாம் நேசிக்கும் பொருட்களில் மனதை ஒருமுகப் படுத்துகிறோம். இனிய இசையைக் கேட்கும்போது மனம் அதில் லயிக்கிறது. அதிலிருந்து மனதைப் பிரிக்கவே முடிவதில்லை. கர்நாடக சங்கீதத்தில் மனத்தை ஒருமுகப்படுத்துபவர்கள் சாதாரண சங்கீதத்தை ரசிப்பதில்லை. சாதாரண சங்கீதத்தில் மனதைக் குவிப்பவர்கள் கர்நாடக சங்கீதத்தை ரசிப்பதில்லை. இத்தகைய உயிரோட்டமான சங்கீதத்தையே மனம் விரும்புகிறது, இதில் மனம் அலைபாய்வதற்கு வாய்ப்பே இல்லை.

இத்தகைய மன ஒருமைப்பாட்டில் உள்ள பிரச்சனை இதுதான் நாம் மனதை அடக்குவதில்லை, மனம் நம்மை அடக்கி ஆள்கிறது. நமக்கு வெளியிலுள்ள ஏதோ ஒரு பொருள் நமது மனத்தை தன்னிடம் இழுத்து, அது விரும்பும் நேரம்வரை தன்னிடமே வைத்துக்கொள்கிறது. இனிய இசையைக் கேட்கிறோம், அழகிய படத்தைப் பார்க்கிறோம், நமது மனம் அங்கேயே நின்று விடுகிறது. நம்மால் அதை மீட்கமுடிவதில்லை.

அதேபோல், நம் மனம் ஒரு குப்பைத்தொட்டியைப் போல, யார் என்ன சொன்னாலும், அதை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும். ஒரு ஊரில் வேதத்திலும், சைவ சித்தாந்தத்திலும் கைதேர்ந்த ஞானி ஒருவர் இருந்தார். ஒருமுறை அவர் சீடர்களுக்குப் பாடம் எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கிருந்த பூனை ஒன்று அவர்கள் முன்பு குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தது. இதனால் அந்த ஞானியின் கவனத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் சீடர்களின் கவனம் சிதறியது. ஆகவே பூனையை பக்கத்தில் இருந்த தூணில் கட்டும்படி ஞானி சொல்ல, அதேபோல் பூனை கட்டப்பட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் பூனை தொந்தரவு தந்ததால் தினமும் பூனை தூணில் கட்டப்பட்டது.

சில வருடங்களில் ஞானி இறந்து விட்டார். சீடர் ஒருவர் ஞானியின் பொறுப்பை ஏற்றார், அவர் பாடம் எடுக்கும்போதும் பூனை தவறாமல் தூணில் கட்டப்பட்டது. சில நாட்களில் பூனை இறந்துவிட, அடுத்தநாள் பாடம் எடுக்க வந்த புது ஞானி, பாடம் எடுக்கும்போது ”தூணிலே பூனை ஒன்று கட்டவேண்டும் என்று தெரியாதா? உடனே போய் புதிய பூனையைக் கொண்டுவந்து கட்டுங்கள்” என்று சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

இந்த ஞானியைப் போன்றுதான், இன்று பலபேர் யார் என்ன சொன்னாலும் அவர்கள் மனம் அதை எற்றுக்கொண்டுவிடுகிறது. அவற்றை விடாமல் மல்லுக்கட்டுகின்றனர். ஆகவேதான் இன்று பல குடும்பங்களில் சண்டைகளும் சச்சரவுகளும் தொடர்கின்றன. இவ்வாறில்லாமல் நம் மனதை ஆக்கபூர்வமான செயல்களுக்காக என்று மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.

நமது செயல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எண்ணங்களை அடக்க முடியவில்லை என்று அடிக்கடி நாம் முறையிடுகிறோம். எப்படி அடக்க முடியும்? நம் வீட்டருகில் ஒரு பெரிய செடி வளர்ந்துள்ளது அதை வெட்டியெறிய வேண்டுமென்றால் அதன் கொப்புகளையும், தண்டுகளையுமா வெட்டிக்கொண்டிருப்பீர்கள்?, அதன் மூலமான வேரை அல்லவா வெட்டியெறிவீர்கள். அதேபோல் நமது செயல்களுக்கும், எண்ணங்களுக்கும் மூலம் என்ன என்பதைக் கண்டறியுங்கள், அதற்கு நம் ஆழ்மன உதவியை நாடுங்கள்.

Hermes Trismegistusஹெர்மிஸ்(Hermes) என்ற ஒரு ஞானியின் கல்லறையை மிகுந்த எதிர்பார்ப்புடன் திறந்து பார்த்தார்கள். அவர் பல இரகசியச் செய்திகளை தன்னுடன் புதைத்து வைத்து இருப்பதாக கேள்விப்பட்டு அவரது சமாதி திறக்கப்பட்டது.

அங்கே ‘As within so without, As above so below.’ என்ற வாசகங்கள் மட்டுமே ஒரு கல்லில் பொறிக்கப்பட்டு இருந்தன. இதை விளக்கவேண்டுமென்றால், ‘உன்னுடைய உள்மனதில் என்ன பதிக்கப்பட்டிருக்கிறதோ அது ஆகாயத்திரையில் இருக்கிறது. இதுதான் வாழ்க்கையின் தத்துவம் ‘ என்று சுருக்கமாக ஹெர்மிஸ் சொல்லிவிட்டார். நம்முடைய ஞானிகளும், ‘நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்’ என்கின்றனர். அப்படியென்றால் நாம் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பதுதானே அர்த்தம், ஆனால் நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லையே? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது யூதக் கைதிகளை பிடித்து வைத்துக்கொண்டு ஜெர்மானியர்கள் பல சோதனைகளைச் செய்திருக்கிறார்கள், அதில், “உங்களைப் புதுமையான முறையில் சாகடிக்கப் போகிறோம், உங்களுடைய உடம்பிலுள்ள இரத்தத்தை வெளியேற்றினால் எப்படி துடிதுடித்துச் சாகப்போகிறீகள் என்பதை பார்க்கப்போகிறோம்” என்றனர் ஜெர்மானிய படை வீரர்கள் அந்தக் கைதிகளிடம். அதன்படி இரண்டு கைதிகளை படுக்கவைத்து கால்களைவெட்டி இரத்தத்தை பாட்டிலில் ‘ட்ப்’, ‘டப்’ என விழ வைத்தனர். பின் இரண்டுபேரின் கண்களையும் கறுப்புத் துணியால் கட்டிவிட்டனர். அதன்பிறகு, ஒருவனின் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுவதை நிறுத்திவிட்டனர், ஆனால் பாட்டிலில் இரத்தம் ‘டப்’, ‘டப்’ என்று விழுமாறு செய்துவிட்டனர். இந்த ‘டப்’, ‘டப்’ சத்தத்திலேயே பீதி அடைந்த கைதி, “ஐயோ இரத்தம் வெளியேறிக்கொண்டே இருக்கிறதே, இன்னும் சிறிது நேரத்தில் இரத்தம் வற்றிச் சாகப் போகிறோம்” என்று பயத்தில் நடுங்க ஆரம்பித்தான். முடிவில் இரத்தம் வெளியேறிய கைதியும் இறந்து போனான், தன் உடம்பிலிருந்து இரத்தம் வெளியேறுகிறதே என்ற பிரமையில் இருந்தவனும் இறந்து போனான்.

இரண்டாமவனின் இறப்புக்கு அவனின் ஆழ்மன எண்ண ஒட்டங்களே காரணமாயிற்று. இப்போது புரிகிறதா எப்படி எண்ணினால் அது செயலாக மாறுகிறது என்று!. நம்முடைய எண்ணங்கள் இரண்டு வகையானவை, ஒன்று மேலோட்டமான எண்ணம் இன்னொன்று ஆழ்மன எண்ணம்.

இதில் மேலோட்டமான எண்ணமே நம்மில் எப்பொழுதும் ஓங்கியிருக்கும், ஆழ்மன எண்ணம் என்பது நாம் உணர்வுபூர்வமாக இருக்கும்போது மட்டுமே செயல்படும்.

மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள முக்கியமான வேறுபாடு மனஒருமைப்பாட்டு ஆற்றலே. இந்த மனஒருமைப்பாடு என்பதை நாம் ஏதோ சிறிதளவாவது அறிந்துதான் உள்ளோம். மன ஒருமைப்பாட்டின் விளைவுகளை நாம் அன்றாடம் சந்திக்கதான் செய்கிறோம். கலை, சங்கீதம் என்று எதுவாகவிருந்தாலும் வெற்றி என்பது மனஒருமைப்பாட்டிலேயே கிடைக்கிறது.

மிருகங்களுக்கு மன ஒருமைப்பாட்டு ஆற்றல் மிகவும் குறைவு. மிருகங்களுக்கு பயிற்சி அளிப்பவர்களுக்கு ஓர் உண்மை தெளிவாகத் தெரியும், அவை சொன்னதை உடனே மறந்துவிடும். மிருகங்களால் ஒரு பொருளின்மீது நீண்ட நேரம் மனத்தை வைத்திருக்க முடியாது. ஆகவே மனிதன் அதிக ஒருமைப்பாடு உள்ளவன் என்பதிலே மனிதனுக்கும் மிருகத்திற்கும் வேறுபாடு உண்டு. ஏன்? சாதாரண மனிதனையும், மிக மேலான மனிதனையும் ஒப்பிட்டுப் பாருங்கள்-ஒருமைப்பாட்டு அளவிலே வேறுபாடு, இது ஒன்றுதான் வித்தியாசம்.

சாலைகள் சந்திக்கும் இடத்தில் நின்று கொண்டு உங்களைக் கடந்து செல்பவர்களை கவனியுங்கள். எத்தனை முகங்கள் சந்தோஷமாக இருக்கின்றன? நூறு பேர் கடந்து போனால், அதில் நான்கோ ஐந்தோ பேர் முகங்களில் தான் சந்தோஷம் இருக்கிறது. மற்றவர்கள் ஏதோ வாழ்க்கையைத் தொலைத்து விட்டவர்கள் போல் திரிகின்றார்கள். ஏன் இப்படி?

ஒரு புத்தமடாலய துறவிகள் சிலர் திபெத் மலை வழியாக பயணித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கே ஒரு பெண் ஆற்றை கடக்க முடியாமல் நின்றிருந்தாள். அவள் ஒரு புத்தகுருவிடம் தன்னை இந்த ஆற்றை கடந்து விடும்படி கேட்டுக்கொண்டாள். ஆனால் அந்த புத்தகுருவோ காதில் எதுவும் விழாததுபோல் சென்றுவிட்டார்.

அவரைத்தொடர்ந்து அவருடைய சீடர் ஒருவர் வந்து கொண்டிருந்தார், துறவிச்சீடரிடமும் அவள் வேண்டினாள் தன்னை மருகரையில் விடச்சொல்லி. துறவிச்சீடரோ அந்த பெண்ணை தூக்கி தம் தோளில் போட்டு மறுகரையில் விட்டுச் சென்று விட்டார். அனைவரும் புத்தமடாலயத்தை அடைந்தனர். இப்போது துறவிக்குரு சீடரிடம் கேட்டார், “நம்முடைய விதிமுறை தெரியாதா உனக்கு, உண்மையான புத்ததுறவிகள் எந்த பெண்ணையும் தொடவோ, கண்ணால் பார்க்கவோ செய்ய மாட்டார்கள்” என்றார். அதற்கு, “நானோ அந்தப் பெண்ணை அப்போதே ஆற்றங்கரையில் விட்டுவிட்டேன்; ஆனால் நீங்களோ இன்னும் மனதில் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்” என்றார் துறவிச்சீடர்.

இந்த புத்த மதகுருவைப் போல்தான் நாமும் இன்று மனதில்தேவையில்லாதவற்றையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறோம். பின்னே எப்படி முகத்தில் சந்தோஷம் மிளிரமுடியும். உங்களுடைய ஐந்து வயதில் பட்டாம்பூச்சியைத் துரத்திக்கொண்டு ஓடினீர்களே, ஞாபகம் இருக்கிறதா? அவைகளை தொட்டவுடன் உங்கள் மன சந்தோஷம் பொங்கிப் பொங்கி வழிந்தது அல்லவா. அந்த மகிழ்ச்சி இப்போது எங்கே? அனைத்தையும் மூட்டை கட்டி ஓரங்கட்டி விட்டோம். இனிமேலாவது அந்த மூட்டைகளைக் கட்டவிழ்ப்போமா!







Bariatrics என்றால் என்ன?


அதிகமான உடல் பருமன், அதைத் தடுக்கும் வழிகள், சிகிச்சை முறைகள் இவற்றைப் பற்றிய மருத்துவப்பிரிவிற்கு Bariatrics என்று பெயர். உடலில் உள்ள கொழுப்பு செல்களின் அளவு அதிகரிக்கும்போது உடல் பருமனாகிப் போகிறது. ஒரு சாதாரண உடலில் 30 முதல் 35 பில்லியன் கொழுப்பு செல்கள் இருக்கும். ஒரு பருமனான உடல் எடையை இழக்கும்போது இந்த செல்கள் அளவில் சிறுக்கத் தொடங்கும். ஆனால் செல்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏதும் இருக்காது. இதன் காரணமாகத்தான் ஒரு முறை உடல் பருமனாகிவிட்டால் எடையைக் குறைப்பது கடினமாகிப் போகிறது.

அறுவை சிகிச்சை மூலம் உடல் பருமனைக் குறைப்பதற்காக சிறுகுடலின் ஒருபகுதி, அல்லது வயிற்றுப்பகுதி நீக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு குறைக்கப்படுகிறது. சிறுகுடலை மாற்றி அமைப்பதன்மூலம் உடல் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சாதாரணமாக ஒருவரின் உடல் எடை 220 கிலோவிற்கு அதிகமானால் இதுபோன்ற அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. ஒருவரின் உடல் தொடர்ந்து 5 ஆண்டுகளாக பருமனாக இருந்து ஆல்கஹால் உபயோகிக்காதவராக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யலாம். மேலும் அவரது மனநலம் திருப்திகரமாகவும் வயது 18 வயதிற்கும் 65 வயதிற்கும் இடைப்பட்டவராக இருத்தல் வேண்டும்.

உடல் பருமன் BMI (Body Mass Indx) என்னும் குறியீட்டால் கணக்கிடப்படுகிறது. இந்தக் குறியீட்டு எண்ணைக் கணக்கிட (1) உடல் எடையை கிலோகிராமில் கண்டறிந்து கொள்ளவேண்டும் மேலும் (2) உடலின் உயரத்தை மீட்டரில் அளந்து அதன் வர்க்கத்தை கணக்கிட்டுக்கொள்ளவேண்டும். (1) ஐ (2) ஆல் வகுத்து வரும் எண்தான் BMI என்பது.

BMI ன் மதிப்பு 20 க்கும் குறைவாக இருந்தால் எடை குறைவானவர் என தீர்மானிக்கலாம். 20 முதல் 25 வரை இருந்தால் சராசரி எடை எனவும், 25 முதல் 30 வரை இருந்தால் அதிக எடை எனவும், 30 முதல் 40 வரை இருந்தால் உடல் பருமனானவர் எனவும் 40 க்கு மேல் இருந்தால் மிகப்பருமனானவர் எனவும் வகைப்படுத்தலாம்.

இன்னும் படிக்க:

http://en.wikipedia.org/wiki/Bariatrics

May 22, 2009

ஒட்டகத்தை கட்டி வைப்போம்

நபிகள் நாயகம் பெருமானார் அவர்கள் ஏக இறைவனாகிய அல்லாமேல் தூய நம்பிக்கை வைக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை உபதேசம் செய்து வந்தார் என்பது நாம் அறிந்ததே.

அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அன்பர் ஒருநாள் நபி பெருமானைப் பார்க்க வந்தார்.
அவர்கல் உரையாடிக் கொண்டிருந்தபோது அந்த அன்பர் பெருமானாரைப் பார்த்து “தங்கள் மார்க்கத்தை அப்படியே ஏற்று அல்லா மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளேன் இப்போதெல்லாம் இரவில் என் ஒட்டகத்தைக்கட்டி வைப்பதுக்கூட இல்லை.
எல்லாவற்றையும் அல்லா பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன். என் நம்பிக்கை சரிதானே?” என்று பெருமையாக கூறினார்.

அப்போது பெருமானார் அவரைப் பார்த்து அமைதியாக “அன்புச் சகோதரரே, அல்லாவை நம்புங்கள். ஆனால் அருள்கூர்ந்துஉங்கள் ஒட்டகத்தைக் கட்டி வையுங்கள்” என்று கூறினாராம்.

எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வான் என்றால் என்ன அர்த்தம்.?

இன்ப துன்ப உணர்வுகள், சமுதாயத் தொடர்பில் வரும் அனைத்தும் இறைவன் செயலே என்றுணர்ந்து எல்லாம் அவன் செயல் என்ற பக்குவப்பட்ட மனதோடு, நிறைவோடு இருப்பது ஆகும்.

எல்லாம் இறைவன் செயல் என்றால் நம் இஷ்டப்படி செயல் செய்யலாமா? அல்லது ஒன்றுமே செய்யாமல் அவன் செயல் என இருந்துவிடலாமா? இது நமக்கு எதைத் தரும்? உருப்படாத சோம்பேறித் தனத்தைதான் தரும்,

இந்த மனம் ஒன்றும் சாதரணப் பட்டதல்ல. சொல்வதைஎல்லாம் நம்பிக்கொள்ள! அது வெளிநோக்கி அலைந்து கொண்டு இருக்கும்வரை

ஐம்புலனுக்கு அடிமைப்பட்டு கிடக்கும் வரை இந்த தத்துவங்களை எல்லாம் கொஞ்சம்கூட ஏற்றுக் கொள்ளாது.

மனதை திருத்த வேதாத்திரி மகான் சொன்னதுபோல் மனதைக் கொண்டுதான் முயலவேண்டும். எதிலும் உள்ளடங்கியுள்ள உண்மையினை உணர்ந்து அவைகளிடையே ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை அறிந்து உள்நோக்கி மனம் தெளிவை அடையுமானால் அடங்க ஆரம்பிக்கும்.

அதன்பின் எல்லாமே அவன் செயல்தான் என்று உணர உணர நம் செயல்களில் முழுஈடுபாடு இருந்தாலும் புளியம்பழம் எப்படி ஓட்டுடன் ஒட்டாமல் ஆனால் ஒன்றாக இருக்கிறதோ அதுபோல் மனம் பாதிப்போ உளைச்சலோ அடையாது.

தனக்கும் பிறர்க்கும் நன்மை விளையும் வண்ணம் நம் கடமைகளை ஆற்றிக்கொண்டே இருக்கவேண்டும். ஆனால் மனம் அதில் முழுமையாக ஈடுபட்டாலும், எவ்வித விளைவு வந்தாலும் எந்தவித சலனமில்லாமல் அமைதியாக இருக்கும்.

இதனால் நம்மிடம் எண்ணங்கள், ஆசைகள்,சினம்,கவலை, போன்றவைகள் தானாக முயற்சி இன்றி சரியாகிவிடும். இதுதான் தானாக நிகழ்வது என்பது.


இம்மனநிலை வர, மனதைப் பழக்கவே,தொடர்ந்த தன்னம்பிக்கை தொடர்பான கட்டுரைகள், உரைகள்,தியானம் சம்பந்தமானவைகள்அனைத்தும்.

அனைத்தையும் உருவாக்கி காத்து நிற்கும் ஆற்றலுக்கு கட்டுப்பட்டு நம் கடமைகளை நாம் முழுமையாக ஆற்றி வாழ்வதே முழுமனிதவாழ்க்கை. இதுவே எல்லாம் அவன் செயல்.என உணர்ந்தாலும், நம் கடைமையான ஒட்டகத்தை கட்டி வைப்போம்.கட்டி வைக்காவிட்டால் காணாமல் போகலாம், வேறு ஏதெனும் நடக்கலாம். விளைவு சிக்கல், துன்பம் தான்.

கடைமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பதில் உள்ள மனநிலையும் இதுதான்

இந்த கட்டுரை சமீபத்தில் நான் படித்ததில் பிடித்தது

May 21, 2009

முதுகுவலி பற்றி தெரியுமா?


முதுகுவலி யாருக்கு வேண்டுமானாலும் வரக்கூடும். அதைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உங்கள் தினசரி வேலைகளின் போது சற்று கவனமாக இருந்தால் அதனை வராமல் தடுக்க முடியும். ஒரு பொருளைத் தூக்க வேண்டுமாயின், தூக்க இருக்கும் பொருளின் பாரம் உங்கள் சக்திக்கு மேற்பட்டதெனில் அதனை நீங்களே தனியே தூக்க முற்பட வேண்டாம். உதவிக்கு ஒருவரை அழையுங்கள்.

தரையிலிருந்து ஏதாவது பொருளை எடுக்க வேண்டுமாயின் அதனைக் குனிந்து எடுக்க வேண்டாம். பாரமான பொருட்களை என்றல்ல, பாரமற்ற பென்சில் போன்ற சிறிய பொருட்களாக இருந்தாலும் கூட முதலாவது படத்தில் காட்டியவாறு முதுகை வளைத்துக் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள்.

மாறாக இரண்டாவது படத்தில் காட்டியவாறு கால்களைச் சற்று அகட்டி வைத்து, பாதங்கள் தரையில் பொறுத்திருக்குமாறு நின்ற பின், முதுகு வளையாதவாறு, முழங்கால்களை மடித்து உட்கார்ந்து எடுங்கள்.

அவ்வாறு எடுக்கும்போது அல்லது தூக்கும்போது முதுகை வளைக்காது இருப்பதுடன் பொருளை நெஞ்சுக்கு அருகே வைத்துத் தூக்குங்கள். இவ்வாறு தூக்கும்போது முதுகை பக்கவாட்டிற்கு ஆட்டி அசைந்து திருப்பாமல் இருப்பதும் முக்கியமாகும்.

ஒரு பாரமான பொருளை, உதாரணத்திற்கு அலமாரியை நகர்த்த வேண்டிய அவசியம் நேர்ந்தால் அதனை கைகளால் இழுப்பதைத் தவிர்த்து முதுகுப் புறத்தால் தள்ளி நகர்த்த முயற்சியுங்கள்.







உட்காரும்போது உயரம் குறைந்த நாற்காலிகளில் உட்காருவதைத் தவிருங்கள். சாப்பாட்டு மேசை நாற்காலிகள் போன்றவை பொதுவாக சரியான உயரம் கொண்டவையாகும்.


உட்காரும்போது உங்கள் முதுகு எவ்வாறு இருக்க வேண்டும்?.

‘வளைந்து உட்காராதே முதுகை செங்குத்தாக நிமிர்த்தியபடி உட்காரு’ என்றே பெற்றோர்கள், பாடசாலை ஆசிரியர்கள் முதல் ஆன்மிகவாதிகள் வரை ஆலோசனை கூறுகிறார்கள்.

ஆனால் இப்பொழுது
எம்.ஆர்.ஐ ஸ்கான் உதவியுடன் செய்யப்பட்ட ஆய்வு அதனை மறுதலிக்கிறது. மேசையை நோக்கி முன்பக்கமாக வளைந்து உட்கார்வதானது முழங்காலில் கீழ்ப்புறத்தில் தேய்மானத்தை ஏற்படுத்தும். ஆனால் நடுவில் உள்ள படத்தைப்போல நிமிர்ந்து உட்காருவது முழங்காலில் அதிக அழுத்தத்தை கொடுத்து அவற்றின் நேர் ஒழுங்கையே குறைத்து விடுவதாகக் கூறுகிறார்கள்.

மாறாக மூன்றாவது படத்தில் காட்டியவாறு இடைப்பட்ட நிலையில் உட்காருவதே குறைந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மனித உடலானது நீண்டநேரம் நிமிர்ந்து உட்காருவதற்காக அமைக்கப்பட்டது அல்ல. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை அதையே செய்ய வைக்கிறது. எனவே நாம் நீண்ட நேரம் உட்காருவதால் முதுகெலும்பு பாதிப்பை குறைக்க வேண்டுமாயின், சற்று சாய்ந்த நிலையில் அதாவது 135 பாகை பின்புறம் சாய்ந்து உட்காருவதே சிறந்தது.

வேலை செய்யும்போதோ அல்லது பிரயாணம் பண்ணும்போதோ நீண்ட நேரம் தொடர்ந்து ஒரே நிலையில் உட்கார்வது முதுகெலும்பிற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும். அந்நேரங்களில் மணிக்கு ஒரு முறையாவது சற்று எழுந்து நின்று தசைகளை நீட்டி நிமிர்த்தி அவற்றிற்கு ஓய்வு கொடுங்கள்.

அதேபோல கார் ஓட்டும்போது உங்கள் ஓட்டுனர் ஆசனத்தின் முதுகு சாய்க்கும் பகுதியானது பதினைந்து பாகையளவு பிற்புறம் சாய்ந்திருக்கும் படி ஒழுங்கு படுத்த வேண்டும். கைகள் தளர்வாக இருப்பதுடன் ஸ்டியரிங்கை இறுகப் பற்றுவதையும் தவிர்க்க வேண்டும். உங்கள் டிரைவிங் சீட்டை சற்று முன்னுக்கு நகர்தினால் இது சாத்தியமாகும்.

முதுகை முன்புறம் வளைந்து, ஸ்டியரிங்கை நோக்கிக கூனிக் கொண்டிருப்பது போல அமர்ந்து கார் ஓட்டுவதைத் தவிருங்கள்.












மேசையருகே உட்கார்ந்து எழுதும்போது முதுகை முன்பக்கமாக வளைந்து சரிந்திருப்பது கூடாது. இருக்கையை மேசைக்கு அருகில் நகர்த்தி வைத்தால் முதுகு வளையாது. உட்காருவது பற்றிக் கூறியதற்கு இணங்க, நிமிர்ந்திருந்து அல்லது சற்று பின்புறம் சாய்ந்திருந்து எழுதுங்கள்.

பொதுவாக குதி உயர்ந்த காலணிகளை அணிவதைத் தவிருங்கள். ஒரு அங்குலத்திற்கு குறைவான உயரமுள்ள குதிப்பகுதியுள்ள காலணிகள் முதுகுவலியை தடுப்பதற்கு நல்லதென கூறுகிறார்கள்.

தினசரி உடற்பயிற்சி செய்வதும், எடையை அதிகரிக்காது பேணுவதும் முதுகுவலியை ஏற்படாது தடுக்கும்.

நீங்கள் காய்கறி நறுக்கும்போதோ அல்லது தேங்காய் துருவும்போதோ அல்லது துணிகளை தேய்க்கும்போதோ (Ironing) ஒரே இடத்தில் நீண்ட நேரம் நிற்க நேரிடும். இது முதுகுதண்டிக்கு அதிக வேலைப்பளுவைக் கொடுக்கும். இதைத் தடுப்பதற்கு ஒரு காலை அரை அடியுள்ள பலகையில் உயர்த்தி வையுங்கள். ஒரே காலை தொடர்ந்து உயர்த்தி வைக்க வேண்டாம். 5 முதல் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கால்களை மாற்றி உயர்த்தி வைக்கவும். இதனால் முள்ளதண்டிற்கான கூடிய வேலைப்பளு குறையும்.

சாதாரண நேரங்களில் நிற்கும் போது உங்கள் உடலானது நேராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
அதாவது காது, தோள் மூட்டு, இடுப்பு மூட்டு ஆகியன ஒரு நேர்கோட்டில் அமைய வேண்டும். தொந்தியை முற்புறம் தொங்கவிட்டு, முதுகை வளைக்காது வயிற்றின் தசைகளை இறுக்கமாக வைத்திருந்தால் முதுகும் நிமிர்ந்து சரியான தோற்றத்தில் நிற்க உதவும்.





நாம் தினமும் தொடர்ந்து ஒரே இடத்தில், ஒரே நிலையில் தொடர்ந்திருப்பது தூங்கும் போதுதான். சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் படுக்கையில் செலவழிக்கிறோம். எனவே அந்தளவு நேரமும் எமது முதுகுதண்டானது அழுத்தம் இன்றி தளர்ச்சியாக இருப்பது அவசியம். அதாவது பகல் வேளையில் நிமிர்ந்து நிற்கும்போது எவ்வாறு முதுகுத்தண்டின் இயல்பான வளைவுகள் பேணப்படுகின்றனவோ அவ்வாறே படுக்கையிலும் பேணப்பட வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் படுக்கையும் தலையணையும் அமைய வேண்டும்.

சரியான படுக்கையானது வெறும் தரையோ, வெறும் பலகையோ அல்ல. அதே போல தளர்ச்சியான ஸ்பிரிங் உள்ள கட்டில்களோ கயித்து கட்டில்கள் போன்றவையும் அல்ல. எமது உடலின் இயற்கையான வளைவுகளை பேணத்தக்களவு மிருதுவான படுக்கையே ஏற்றது. உதாரணமாக பலகை மேல் சற்று இறுக்கமான மெத்தை போட்ட படுக்கை பொருத்தமாக இருக்கும்

தலையானது உங்கள் தலைக்கும் படுக்கைக்கும் இடையிலான இடத்தை சரியான அளவில் நிரப்புதற்கு ஏற்ற பருமனுடையதாக இருக்க வேண்டும். முதற் படத்தில் முள்ளந் தண்டானது இடுப்பு முதல் தலை வரை ஒரே நேராக இருக்கின்றன. மெத்தையும் தலையணையும் அதற்கேற்ற பருமனும் அடர்த்தியும் கொண்டிருக்கின்றன. இரண்டாவது படத்திலுள்ள கட்டில் மிகவும் தளர்ச்சியானதாக இருப்பதால் உங்கள் உடற்பாரத்தால் முதுகுதண்டு வளைந்து கோணும்படி செய்துவிடுகின்றன. இது ஆரோக்கியமானதல்ல

மூன்றாவது படத்தில் உள்ளது போன்ற கடுமையான சற்றும் இசைந்து கொடுக்காத தரை அல்லது பலகை கட்டில் போன்ற படுக்கை ஏற்றதல்ல என்பது புரிந்திருக்கும். காரணம் இதுவும் உங்கள் முதுகுத்தண்டின் இயல்பான வளைவுகளை பேணுவதில்லை.

ஒரு பக்கம் சரிந்து, முழங்கால்களை சற்று மடித்துப் படுப்பதுதான் தூங்குவதற்கு ஏற்ற மிகச் சிறந்த நிலையாகும். முழங்கால்களுக்கு இடையே ஒரு சிறிய தலையணையை வைப்பது மேலும் சொகுசாக அமையும். குப்புற முகம் புதைத்து வயிற்றில் அழுத்துமாறு ஒருபோதும் படுக்க வேண்டாம். மாறாக நிமிர்ந்து படுப்பதாயின் முழங்கால்களுக்கு கீழே ஒரு தலையணை வையுங்கள். இவ்வாறு தூங்கும்போது கணுக்களுக்கு கீழே ஒரு சிறிய தலையணை வைப்பதும் நல்லது.

பயிற்சி...

முதுகுத்தண்டை அண்டியுள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்பதனால் வலி குறைவதுடன் மீண்டும் மீண்டும் பிடிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும். இரண்டு முழங்கால்களையும் குத்தென மடித்துப் படுங்கள். இப்பொழுது உங்கள் இடது முழங்காலை மெதுவாக நெஞ்சைத் தொடுவது போல உயர்த்துங்கள். இவ்வாறு செய்யும்போது உங்கள் கட்டிலோடு அல்லது தரையோடு நன்கு அழுத்துப்பட வேண்டும். இவ்வாறு 5 செகண்ட் செய்த பின்னர் கால்களைப் பழைய நிலைக்கு கொண்டு சென்று தளரவிடுங்கள். இனி வலது காலுக்கும் இதே பயிற்சியைச் செய்யுங்கள். மாறி மாறி ஒவ்வொரு காலுக்கும் பத்துத் தடவை செய்யுங்கள்.

மேற் கூறியது முதுகுப்புற தசைகளுக்கான பயிற்சி. இதைத் தவிர நீந்துவது, வேக நடை போன்ற ஏனைய பயிற்சிகளையும் செய்து வாருங்கள்.