Mar 27, 2010

ஆணென்ன....பெண்ணென்ன......

ஒரு குழந்தை ஆணாக வேண்டுமென்றோ, பெண்ணாக வேண்டுமென்றோ விரும்பி பிறப்பதில்லை. சுமக்கும்போது எல்லா தாய்களும் ஒரே மாதிரிதான் கவனம் எடுத்துக்கொள்கிறார்கள். பின் ஏன்?..எங்கிருந்து ?.. வருகிறது இந்த ஆண்குழந்தை உசத்தி,.... பெண்குழந்தை மட்டம்.... என்ற எண்ணங்கள்?....பிறந்த அந்த நொடியிலேயே வேறுபாடு ஆரம்பித்து விடுகிறது.. சில ஆஸ்பத்திரிகளில், ஆண்குழந்தை பிறந்தால், அதை சொந்தங்களிடம் வந்து சொல்லும் சில ஆயாக்களுக்கு, ஐம்பது, நூறு என்று பணம் கொடுக்க வேண்டும்.இல்லையேல் லேசில் குழந்தையை வெளியே கொண்டு வந்து காட்ட மாட்டார்கள்.

Mar 20, 2010

இன்று உலக சிட்டுக்குருவி தினம் ?!?...

Front page news and headlines today 'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...' என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது.
தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட மறக்கவில்லை.



உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால், 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்பட்டது.

Mar 15, 2010

மென் தொகுப்புகளை இணையம் இல்லாத போதும் உபயோகிக்க.

வலை மேன்தொகுப்புகள்(Web Application) பற்றி நிறைய பதிவுகள் வந்துவிட்டது. நமக்கே தெரியாமல், நாமும் நிறைய வலை மேன்தொகுப்புகளை உபயோகிக்கிறோம்.

ஆனால் இதில் உள்ள சிக்கல் என்ன என்றால் இணைய இணைப்பு இல்லாத போது உங்கள் கணினியில் அவற்றை உபயோகிக்க முடியாது.

இதை சரிக்கட்ட கூகிள் கொண்டு வந்த மேன்தொகுப்பு தான் Google Gears. இதன் மூலம், வலை மேன்தொகுப்புக்ளை இணையம் இல்லாத போதும், உங்கள் உலவியின் மூலம் உபயோகிக்க முடியும்.
 

Mar 11, 2010

நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது !!!

திரு.கமலஹாசனின் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். என்னும் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்."கடவுள் இல்லை என்பவர்களையும் நம்பலாம்,கடவுள் உண்டு என்பவனையும் நம்லாம், நான் தான் கடவுள் என்பவனை நம்பவே கூடாது"என்று. இவை கல்வெட்டு வார்த்தைகள். இதனை எல்லோரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Mar 7, 2010

குழந்தைகளை அடிக்கலாமா? பகுதி 2

குழந்தைகளை அடிக்க கூடாது..

ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், ‘நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர்.


கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின்