Jul 22, 2010

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு.....

இந்தியாவில் அதிக கேமிரா விற்கும் நிறுவனம் எது ?

நீங்கள் சோனி, கேனான், நிக்கான் என்று பதிலளித்தால், அது தவறு. இதில் யாருமே இல்லை. நோகியா தான் அதிக கேமிரா விற்கிறார்கள். ஆனால், அவர்கள் கேமிரா விற்பனையாளர்களாக தெரிவதில்லை. செல்போன் விற்பனை செய்பவர்களாக தெரிகிறார்கள்.

செல்போனோடு கேமிராவருவதால் கேமிரா விற்பனை குறைந்து போயிருக்கிறது. செல்போனிலே கேமிரா இருப்பதால் பலர் தனியாக கேமிராவை வாங்குவதில்லை.
கேமிரா வாங்க வேண்டும் என்று இல்லை. செல்போனை கூட வாங்கலாம் என்பது தான் இன்றைய நிதர்சனம்.

இந்தியாவில் அதிக கேமிரா இசை பாடல்கள் விற்பனை செய்யும் நிறுவனம் எது ?

HMV இல்லை. ச-ரி-க–ம. அதும் இல்லை. ஏர்டெல் தான். காலர் டுயூன் என்ற பெயரில் ஒவ்வொரு நொடிக்கு பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். பல இசை ஆல்பம் நிறுவனங்களை விட ஏர்டெல் அதிகமாக சம்பாதிக்கிறது. அதுவும் நிமிடங்களில்..!

ஏர்டெல் இசை நிறுவனமில்லை. தொலைப்பேசி சேவை நிறுவனம் மட்டுமே. காலர் டியூன் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொடுக்கும் சேவை. ஆனால், மற்ற இசை நிறுவனங்களை விட காலர் டியூனில் ஏர்டெல் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-போன்', கூகிள் நிறுவனத்தின் 'அன்திராய்ட்' போன்ற வரவால் தங்கள் விற்பனை பாதிக்க படலாம் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள், ஆப்பிள் செல்போன் விற்கும் நிறுவனமாக மாறபோகிறதா என்ன ? இல்லை.

நோக்கியாவுக்கும், கேனானுக்கு என்ன சம்பந்தம் ? ஏர்டெலுக்கும், எச்.எம்.விக்கும் என்ன சம்பந்தம் ? ஆனால் இதில் ஒரு நிறுவனத்தால் இன்னொரு நிறுவனத்தின் விற்பனை பாதிக்கிறது. மறைமுகமான போட்டியாளராக இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக பெரிய யுத்த காவியம் என்று கேட்டால் 'மகாபாரதம்' என்று சொல்லுவார்கள். ஆனால், நாளை மிக பெரிய யுத்தம் இதுவாக தான் இருக்க முடியும். ஆம்... யார் நம் போட்டியாளர் ?

என் மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் " ஆப்பிள் நிறுவனம் சோனி நிறுவனத்துக்கு என்ன செய்தது, சோனி நிறுவனம் கோடாக் நிறுவனத்துக்கு என்ன செய்தது ?" . பதிலிது தான். சோனி நிறுவனம் ஒலியை விற்பனை செய்கிறார்கள். கோடாக் நிறுவனம் ஒளியால் படத்தை விற்பனை செய்கிறார்கள். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த இரண்டையும் உள்வாங்கி கொண்டு தனது கணினியில் ஒலி (sound) மற்றும் ஒளி (Light)யை காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கணினி சோனி, கோடாக் நிறுவனத்தை விழுங்கும் ஆபாயம் உள்ளது.

முன்பெல்லாம் கோடாக் பிலிம் வாங்கி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு இருந்தோம். டிஜிட்டல் காமிரா வந்ததும் கோடாக் பிலிம் வாங்குவது குறைந்துவிட்டது. காமிராவுக்காக தான் கோடாக் நிறுவனம் பிலிம் தயாரித்தது. ஆனால், பிலிம் இல்லாமல் காமிரா வரும் என்று கோடாக் நிறுவனம் யூகித்திருப்பார்களா ??

2008 ஆண்டில், பிரிட்டிஷ் ஆர்வேஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் யார் போட்டியாளராக இருந்தார்கள் தெரியுமா ? சிங்கபூர் ஆர்லைன்ஸ். இல்லை. இந்தியன் ஆர்லைன்ஸ். அதுவும் இல்லை. எச்.பி , சிஸ்கோ நிறுவனத்தின் டெலி கான்பிரன்ஸ் தான் பதில். யூகிக்க முடியாத பதில் தான். ரெசிஷன் சமயத்தில் நிறுவனங்களின் செலவுகளை குறைக்க பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மேலதிகாரிகளை வெளியூர் அனுப்புவதற்கு பதிலாக, டெலிகான்பிரன்ஸ் முறையில் பேசி தங்கள் வேலையை முடித்துக் கொண்டனர். ரெசிஷன் சரியாகி மீண்டும் பழைய நிலையில் திரும்பினாலும், ஆர்லைன்ஸ்யை விட டெலிகான்பிரஸ் முறையை தான் பயன்படுத்துவார்கள்.

இந்திய மக்களுக்கு இரண்டு பொழுது போக்கு விஷயம், ஒன்று சினிமா. இன்னொன்று கிரிக்கெட். டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி நடந்த வரையில் சினிமாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கிரிக்கெட்டில் ஷேவாக், தோனி கடவுள் என்றால், சினிமாவில் ரஜினி, கமல் கடவுள். இரண்டும் வெவ்வேறாக தான் இருந்தது. ஆனால், 20-20 ஓவர் IPL ஆட்டம் வந்ததும் பல படங்கள் வெளியிட தயங்கினர். சில திரையரங்குகளில் 20-20 IPL கிரிக்கெட் ஆட்டத்தை பிரத்தியேக முறையில் ஒளிபரப்பினர். படங்களை திரையிட கூட திரையரங்கு கிடைக்கவில்லை. காரணம், 20-20 கிரிக்கெட், சினிமாவும் மூன்று மணி நேர பொழுது போக்கும் அம்சம் கொண்டது. 3 மணி நேரம் படம் பார்த்தால் என்ன ? கிரிக்கெட் பார்த்தால் என்ன ? ரசிகர்களின் எண்ணம் சினிமாவை ஓறம் கட்டியது.

முப்பது வருடங்களுக்கு முன்பு, கருப்பு வெள்ளை படம், டைப் ரைட்டர், ஃபௌன்ட்டன் பேன் பயன்படுத்தினர். இப்போது அது எல்லாம் நினைவு சின்னம் தான். கணினி வந்த பிறகு டைப் ரைட்டரை யாரும் பயன்படுத்துவதில்லை. விஞ்ஞான வளர்ச்சி பல கருவிகள் உருவாக்குகிறது மட்டுமல்ல, உருவாக்கின கருவிகளை அழித்தும் இருக்கிறது.

இன்று காலையில் சிக்கிரம் விழிக்க யார் ஆலாரத்தை நாடுகிறார்கள். எத்தனை பேர் வீட்டில் ஆலார கடிகாரம் இருக்கிறது. செல்போன் எடுத்தோமா , நேரத்தை செட் செய்தோமா... அவ்வளவு தான். காலையில் திரைப்பட பாடலோடு விழிக்கலாம். ஆனால், இதில் பாதிக்க பட்டது டைட்டன் நிறுவனம் தான். ஆலார கடிகாரத்தை டைட்டன் நிறுவனம் இப்போது தயாரிப்பது இல்லை.

நாளைய புத்தகங்களுக்கு பதிலாக ஈ -புக் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஏன் பாடம் சொல்லி தரும் ரோபோவாக இருக்க கூடாது ? ஆசிரியர், புத்தகம் இரண்டுமே தேவையில்லை. நினைத்தமாத்திரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம்.

நாளை ஆப்பிள் நிறுவனம் கதை சொல்லி இயந்திரத்தை தயாரித்தால் என்னாகும். எழுத்தாளர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளும். வணிகத்தில் தங்கள் போட்டியாளர்களை வைத்து தான் தங்கள் தயாரிப்பை நிர்ணயம் செய்தார்கள். ஆனால், இப்போது போட்டியாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது..... ‘யார் நம் போட்டியாளர் ?’ என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !!

***

மேல் சொன்ன கட்டுரை ஐ.ஐ.எம், பெங்களூர் பிரோபஸர் டாக்டர் ஒய்.எல்.வி. மூர்த்தி அவர்கள் “Have breakfast .. or be breakfast” என்ற தலைப்பில் எழுதியது.

No comments: