Jul 20, 2009

புத்தர் சிலையானார்


மதிப்பு
--------
நேரத்திற்கு தான் மதிப்பு
கடிகாரத்திற்கு அல்ல.

தேனீருக்கு தான் மதிப்பு
கோப்பைக்கு அல்ல.






வில்லு

-----------

கிளி தெரியவில்லை.
கிளியின் கண் மட்டும் தெரிந்தது.
விஜயன் ஜென் ஆனான்.


குரு
-----
குரு பாதுகை ஓசை கேட்டதும்
நான் விழித்தேன்.
குரு நடப்பதை நிறுத்தியதும்
அவரின் பாதுகை என்னிடத்தில்
இருக்கிறது.


காமம்
--------
மீன் குளத்தில் நிறைந்து இருக்கிறது.
அங்கும் இங்கும் அலைகிறது.
நிற்கும் போதும் செவுள் அசைகிறது.

வறட்சி வந்ததும்
குளமும் இல்லை.
மீனும் இல்லை.

சடங்கு
--------
பல காலம் புத்தரை வணங்கினேன்.
புத்தர் சிலையால் என் தலையில் அடித்தார் குரு.
புத்தர் சிலையானார்...!